Friday, March 28

கிளையிலிருந்து உதிரும் இலையாய்...



கிளையிலிருந்து உதிரும் இலையாய் அவள்
மேலாடை மெல்ல சரிய தெரியும்
வெள்ளி முளைத்த முனைகளிரண்டும்
முரண்டு பிடித்து என்னை கவர்ந்திழுக்கும்..,
பைசா கோபுரம் நேர்திசையில் நேர்த்தியாய்
என் நெற்றியில் உரசி உயிர்பரிக்கும்,
மெல்ல திருகி, விரல்களுக்குள் திணித்து
பக்குவமாய் பிசைந்திடவே பசித்திருக்கும்
என் கைகளிரண்டும், நெஞ்சம் ஒன்றும்
நிறைமாத வயிறாய் என் கண்களும்..,
காணதது கண்டதுப்போல் பிதுங்கி நிற்கும்,
உயிர் இருந்தும் இறந்தவனாய் நானும்
அவள் மடியினால் மடிந்துப்போனேன்.

எழுத்தோலை!