Thursday, July 25

திருக்குறளே தேசிய நூல்!


June`06

"திருக்குறளே தேசிய நூல்" மாநாட்டில் வெளியிட இருக்கும் நூலில் பங்கேற்க இருக்கும் எனது வரிகள். (எனது குரலில் ஒரு வேண்டுக்கோள்)
--------------------------------------------------------------------


பாரதத்தின் தேசிய நூலும் திருக்குறளே!
-------------------------------------------------------

அரியணையில் வீற்றிருக்கும்
அன்னைத்தமிழில் - ஆண்டுகள்
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையில்
தெய்வப்புலவராம் திருவள்ளுவர்
அருளிய குறள் என்னும்
திருக்குறளே,

உறவுக்கெல்லாம் முதலே - அதுவும்
முப்பால் கொண்டே வளர்த்தது நமையே,
திருக்குறள் அதவும் மறையே - மாறாது
வாழ்வியல் நெறி புகுத்தியது முறையே,
மொழிக்கடந்து, மதம் தவிர்த்தே
நிதம் எல்லாம் சொல்ல,
நிஜம் காட்டும் அறிவும்,
அறம், பொருள், இன்பம் கூட்டும்,

வாழ்வியல் ஆதாரம் தனை - முறையே
வாழ்ந்திட தவறியோர்க்கு, இணை ஏதும்
இல்லாத இடர் எல்லாம் சூழ - வாழ்ந்தும்
வாழாதவறாய் வீழும் நிலை எல்லாம்
இப்பொதுமறை மொழித்தொடர - இன்பமும்
கிட்டும், நிறைவில்லா சுகம் முட்டும்,

அத்துனை அற்புதம் புரியும்
சொற்பத சுவையில் ருசிக்கும்,
பொருள் பல நிறைந்து,
நிமிர்ந்து நடக்க துனியும்
குறள் காட்டும் ஒவ்வொரு வரியும்,
கோர்த்தே செய்த எழுத்துச் சித்திர நூலும்,
அதுவே, உலகை சுருக்கி நமக்கும்
உள்ளங்கையில் தந்ததே என்றோ,

அதனை கொண்டாடும் நாடுகள் எல்லாம்
ஆங்காங்கே விரிந்து, சிறந்து இருக்க,
தன்னகத்தே கொண்ட நாடும் - மதியாமல்
மறைத்திட முனைய - தமிழனாய் ஒன்று சேர்
திருக்குறளே தேசிய நூலாய் இயற்றிடும் வரையில்
தன்னலம் மறந்து குரல் எழுப்ப வா,
தலை நிமிரும் நேரம் இதுவே,
பாரதத்தின் தேசிய நூலும் திருக்குறளே.


எழுத்தோலை!

Wednesday, July 24

என்னையும் அறியாமலே...


June`06

விடியாத இரவின் இருள் சேர்த்த 
கருமை நிறத்திலோர் வாழ்வும் எனது, 
புரியாத உறவுகள் எனை சூழ - அறியாத 
பிள்ளைப்போல் விழித்துக்கொண்டிருக்கிறேன் நானும்,

இன்னும் வாழ்கிறேன் ஏனென்று தெரியாமலே,
இருந்தும் சாகிறேன் என்னையும் அறியாமலே. 

எழுத்தோலை!

ஒன்றேனும் நடக்கவேண்டும்...




என் கனவெல்லாம்
உனது குரலில்,
எனது பாடல் ஒன்றேனும்
ஒலியுருவம் கொள்ளவேண்டும்,
ஊரெல்லாம் முனுமுக்க - உளம்
மகிழ்ந்துப் நான் போகவேண்டும்,
மரணம் என்னை தழுவும் முன்
இது ஒன்றேனும் நடக்கவேண்டும்.


எழுத்தோலை!

சிதைக்குதடி..



June`04

வளைந்த வில்லினை யாரெடுத்து
வாய் பேசும் பூவே உந்தன் 
இதழ்கள் செய்தது,
எய்தாத அம்பினால் என்னை,

எண்ணில்லா கணக்கில் துளைக்குதடி - எட்டி 
இருக்கும் போதே, இலக்கும் தவறா சிதைக்குதடி.

எழுத்தோலை!

நான் இங்கு தவிக்கிறேன்..


அன்பாய் பழக,
செல்லமாய் வருட,
உள்ளங்கையில் முடக்க நினைத்த
பட்டாம்பூச்சி,
உதறிக்கொண்டு பறந்ததடி,
இறக்கைகள் மேல் தடவிய
வர்ணங்கள் மட்டும் - என்
உள்ளங்கையில் உலர்ந்ததடி,

நீ பட்டாம்பூச்சியா - இல்லை
படைத்தவன் காட்சியா?
புரியாமல், புலம்பியப்படி - நான்
இங்கு தவிக்கிறேன்.

எழுத்தோலை!

எனக்குள், ஒரு மின்னல், ஒரு மழை...


May`31



வாய்வரை வந்த வார்த்தை - ஏனோ
வழித்தவறிப் போனதடி,
எல்லாம் உன்னாலே கண்ணே,
எல்லாம் உன்னாலே,

எனக்குள்,
ஒரு மின்னல்,
ஒரு மழை,
புது வெள்ளம் எல்லாம்
தன்னாலே தோன்றி
தன்னாலே மறையுதே என் முன்னே,

ஒரு சொல், ஈருயிரை
ஓருடலாய் இணைக்கும் என்றால்,
அச்சொல் சொல்வதில் - அச்சமில்லை,
அச்சமில்லை அச்சமென்பதில்லையே,

சொல்லவா, சொல்லாமல் செல்லவா
சொல்லிவிட்டு ஏதும் கேட்காமல் போனால்
சொல்லும், கொள்ளும் என்னை என்றே
சொல்லிவிட முனைந்தே, முடியாமல் தவிக்கிறேன்.

எழுத்தோலை!

நீயே அசந்துப்போவாய்...



May`31

கனிவாய் மொழிப் பேசி 
இனிமை கடைந்தெடுக்கும் - உன் 
செவ்வாய் இதழ் முத்தம் 
நித்தம் ஒன்று வேண்டும்,
அணுவணுவாய் நான் சாக 
அரை நொடிக்கொரு முத்தம் போதும்,

அதிகமாய் ஆசையும்
அளவில்லா பேராசையும்
அடிக்கொருமுறை நடிப்பதை பார்,
நீயே அசந்துப்போவாய்.

எழுத்தோலை!

உன்னில் உள்ளேன் நானும், நலமாய்...


May`31

கடுகளவு, மிளகு நிற பொட்டு வைத்த,
வட்ட நிலவு ஒன்றை கண்டேன்,
வாஞ்சையுடன் கண்கள் நனைத்து 
குளித்திட நினைத்தேன்,
கடல் அழகு நீ அல்லவா,
காணாமலே நானும் போனேன்,
கண்டுப்பிடுத்து கொடுக்கவும் என்னை,
கண்ட இடத்தில் தேடிட வேண்டாம் பெண்ணே,
உன்னில் உள்ளேன் நானும், நலமாய்.

எழுத்தோலை!

நெத்திலி கருவாட்டுக் குழம்பு..


May`31

நேற்றைய மாலைப் பொழுதும் 
நேரலை காட்டிக் சென்றது,
நீ - மணக்க கொதிக்க விட்ட - நெத்திலி 
கருவாட்டுக் குழம்பு,

எட்டு ஊரை கடந்து 
எங்கள் தெருவில் மணக்குதடி 
உன் கைப் பக்குவ அழகில் - நெத்திலி
கருவாட்டுக் குழம்பு,

கண்ட நேரத்திலே
நாவும் நீரை இறைக்க - உண்ண
என்னை தூண்டுதே, நீ வைத்த - நெத்திலி
கருவாட்டுக் குழம்பு,

என்றுனை சேர்வேனோ
அந்நாளில் எல்லாம் சாத்தியமே - உண்டு
களித்து உளம் மகிழவைக்கும் - நெத்திலி
கருவாட்டுக் குழம்பு,

கனவெல்லாம், உன் கைப்பிடி பிடித்தே,
ஒருருண்டை எனக்கூட்டும், உன்
விரல் ஸ்பரிச வாசம் கூட்டும் - நெத்திலி
கருவாட்டுக் குழம்பு,

நேற்றைய மாலைப் பொழுதும்
நேரலை காட்டிக் சென்றது,
நீ - மணக்க கொதிக்க விட்ட - நெத்திலி
கருவாட்டுக் குழம்பு,
நீ - மணக்க கொதிக்க விட்ட - நெத்திலி
கருவாட்டுக் குழம்பு.

எழுத்தோலை!

என் இதழ்(களுக்கு)கள் மட்டுமே, அறியுமே...


May`29

புல்லாங்குழல் துளை மீது - அவள் 
தேன்த்துளிர் இதழ்கள் உரச 
உண்டாகும் இசைக்கும் ஈடாய் 
யாழிசையும் நிற்குமோ?

ஏழிசை அறிந்தவன் கூட - அவள் 
இதழிசைக்கு மெட்டமைக்க 
முடியாமல் முழிப்பிதுங்கி 
மயக்கமும் கொள்ள செய்யும்,

இசையாய் பிறந்தவள் அவளே
என் அவளே - அவள் இதழ் சிந்தும்
அத்துனை இசைகளும், இனிமைகளும்
என் இதழ்(களுக்கு)கள் மட்டுமே, அறியுமே.

எழுத்தோலை!

கொலுசே கொலுசே...



May`29

அவள் கணுக்கால் அதனை சுற்றிய 
வெள்ளிக் கொலுசிடம் ஓர் கோரிக்கை,

ஜல்லென்று சொல்லும் ஜதிப் போலே,
நதி மீது மிதக்கும் சருகாக, 
மதிப்போல வருடும் ஒளியாக, 
மெத்தைப்போல் நடக்கும் அவள் பாதங்கள் 
என் மார்பினில் பதிந்து கடந்திடவே, 
உன் சார்பினில் கோரிக்கை விடுக்கிறேன் ,
நான் இருந்தாலும், இறந்தாலும் சென்றடையும்
சொர்கத்தின் வசம் கிட்டும் மோட்சமும்,
இப்பொழுதே, இக்கணமே கேட்கிறேன்.

அவளிடம் சொல்வாயோ
அவள் வசம் சேர்ப்பாயோ
கொலுசே, கொலுசே..- வெள்ளிக்
கொலுசே கொலுசே.


எழுத்தோலை!

நானும், ஒ நாயுமாய்...


May`29

பின்னிரவு ஜாமத்தில் 
ஐந்தறிவு ஒ நாயைப்போல் 
ஓலைமிட்டப்படி ஓடோடி 
அலைகிறேன், 

அவள்,
கால் நகங்கள் கண்ட என் கண்கள்,
அதன் சிவந்த நிறங்களில் நனைந்து 
நகச்சாய வண்ணத்தில் நுழைந்து, 
சுண்டுவிரல் தொட்டு, கட்டை விரல்வரை
முத்தங்களை முன்னிறுத்தி - சத்தமும்
இல்லாமலே சலங்கை ஒலி
சத்தங்களை எழுப்பி - சிலுப்பிக்
கொண்டு ஓடும் மீனாய் நழுவி
மீண்டும் முத்தக்கணக்கை
மணிக்கணக்கில் தொடர்ந்திடும் நேரமும்,

நானும், ஒ நாயுமாய் ஓலங்களை
எழுப்பி உற்சாகத்தில் திளைப்பேனோ.


எழுத்தோலை!

இக்குளிர் எனக்கு மட்டுமே வேண்டும்...




May`25



செவிகள் குளிரில் நடுங்குதடி - உன் 
குரல்கள் பரவிய இவ்விரவினிலே,
சற்றே உரக்க பேசாத கண்ணே 
நான் சுயநலவாதி, 

எழுத்தோலை!

அறிய எப்படி தவிர்த்தாய்...


May`24

நாட்குறிப்புகள் எழுதத் தொடங்கிவிட்டேன்,
நாட்குறிப்புகள் எழுதத் தொடங்கிவிட்டேன் நானும்,
என்றுனைக் கண்டேனோ 
அந்த நாள் முதல் 
இந்த நாள் வரை - நித்தம், நித்தம் 
கவிதைகள் எனும்ப் பெயரில் 
ஏதேதோ கிறுக்கி என் நாட்குறிப்பை 
நிரப்புகிறேன்,

நீயும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே
காற்றில் பறக்கவிடுகிறேன்,
கணினி வாயிலாய்
எழுத்தோலை எனும்ப் பெயரில் - நீயோ
பார்த்தாய், படித்தாய், ரசித்தாய் - பின்பு
எப்படி என்னை அறிய தவிர்த்தாய்,

எழுதியதெல்லாம் எழுத்துக்களாக தெரிந்ததோ
உனக்கும், மற்றவர்க்கெப்படியோ போகட்டும்,
என் எண்ணங்கள் ஒன்றுமா - இன்னும்
புரியவில்லை உனக்கு?

உலகமே அறிந்தவளே - என்னை
அறிய எப்படி தவிர்த்தாய்.


எழுத்தோலை!

சொற்கள் கற்றுக் கொடுப்போம்...


May`24

அழகாய் அரும்பிய நம் உறவிற்கு,
என்ன பெயர் நாம் சூட்டுவது,
செந்தமிழில் ஒரு பெயரை - நீயே 
சொல்லிவிடு இன்றே,

தெரிந்துக்கொள்வோம்,
செல்லமாய் அழைப்போம்,
சேர்ந்தே இருப்போம், முத்த - 
மிழை மொத்தமாய் கற்று முடிப்போம்,

நாளை வரும் சந்ததிக்கும் - நான்கு
சொற்கள் கற்றுக் கொடுப்போம்.

எழுத்தோலை!

அப்பறவைகளும், நானும்..


May`24

மீன்க்கொத்தி பறவைகள் எல்லாம் - ஏமாந்தே,
வந்த வழி திரும்பிட முனையுமோ,

ஏனடி கண்களை மூடிக்கொண்டாய்,
பாவம் அல்லவா அப்பறவைகளும், நானும்.

எழுத்தோலை!

கனவே கலையாதே...


May`24

அரவணைக்கும் என் - இருக் 
கைகள் இருந்தும் - உன்னருகில் 
நான் இல்லையடி என்செய்வேன்,
தொலைவில் இருந்தே - உன் 
கண்களை வருடுகிறேன்,
இதமா என்பதை - பதம் 
பார்த்த நீயே சொல்லிவிடு,
நிதமும் கிடைக்கும் நிச்சயமாய்
இதம் தரும் என் விரல்களின் 
வருடல்கள்,
என்றென்றும் என்னுயிர்
உள்ளவரை,

கனவே கலையாதே...

எழுத்தோலை!

ரசித்து தான் கிடந்திடவே...



May`24

நீ நடந்து வரும் பாதைகளில் - இருக்கும்
வேகத்தடையாய் நான் இருக்க கூடாதா?

உன் பாதங்கள் முழுதாய் - மெதுவாய்,
என்னில் பதிந்து நடந்துப் போவதை,
சில நிமிடங்களேனும் ,
தரிசித்து, ரசித்து தான் கிடந்திடவே??

எழுத்தோலை!

அனுப்பி வைத்ததாக...


May`23

மின்னி, மின்னி ஒளிரத்துடிக்கும் 
மின் குழாய் விளக்கு,
என்னிடம் ஒன்று சொல்லிவிட்டு -
(நின்றது)ஒளிர்ந்தது,

காய்ச்சல் வந்த உண்கண்களால் 
இன்னும் - இன்றும் 
ஒளிவீச முடியாதாம்,
நிலவுக்கும் குளிர் சுரமாம்,

இரவினில் நான் தடுமாராதிருக்கவே,
அதனை நீயும் அனுப்பி வைத்ததாக.

எழுத்தோலை!

உனைச்சுற்றியே...

May`23

இருபத்தினான்கு மணி நேரத்தில்
ஒரு நொடியிடமாவது கேட்டுப்பார்,
அதுவும், நொடிக்க மறந்தால் 
என்னவாகுமென்று,

அப்படிதான் நானும்,
ஒரு நாள் அல்ல,
இரவிலும் கூட உன்னையே நினைத்து,
துடித்துக்கொண்டிருக்கிறேன்...

உலகமே நின்றிடும் சூழ்நிலையும்,
நானோ நின்றிடாமலே, உனைச்சுற்றியே.

எழுத்தோலை!

இருட்டும் தொடர்ந்திட முடியுமோ?


May`23

கல்லடிப் பட்ட காயமும், 
சொல்லடிப் பட்ட நெஞ்சமும்,
கண்ணடிப் பட்ட ஓவியமும்,
கலங்கிடும் நிலையிலும்
நீரோடையால் விழிகளும்,

வீங்கி சுருங்கி, சிறியதாய் போகுமோ,
சித்திரையின் சீற்றமோ,
அனல்க்காற்றின் தாக்கமோ,
எதனால் இந்த மாற்றமோ
எல்லாம் விலகிடும் கலங்காதே.

விடியலென்று ஒன்று இருப்பின்
இருட்டும் தொடர்ந்திட முடியுமோ?

எழுத்தோலை!

இவ்வுலகமும் செழித்திட..


May`22

கொட்டும் மழைக்கூட 
கொட்டாவி விட்டு உறங்கும்,
மின்னலும் மின்னிட நானும்,
இடிகளும் மேகத்துள் முடங்கும்,
ஏனிந்த மாற்றம்,
என்னவள் தன்னை தண்ணீரில் 
நனைக்கும் நேரமும் வந்தால்,
வானிற்கும் விடுமுறையோ,
அவள் தலைத்துவட்ட, சிகை உதிற
கொட்டுவதும் மழையோ,

இதுவும் போதாதோ,
இவ்வுலகமும் செழித்திட??

எழுத்தோலை!

இனிக்கும் தங்கமே...


May`18

சில்லென்ற மழையும் மழலையாய் 
குறைமாத கருவாய் - எனக்கென்றே
செல்லமாய் பிறந்ததிங்கே,
சின்னுவென்று உன்னை அழைக்க 
மின்னுகின்ற பூவாய் கைகள் விரித்து - நீ,
ம்மா, ம்மா என்றழைக்கும் அழைப்பை
கேட்கும் நேரமே என்னையும் நானே 
மறந்துப் போகிறேன்...
பவ்யு சொல்லி பவ்யமாய் என்னை 
ஆட்க்கொள்ளும் அழகியப் பனிப்பூவே
நீ - நாளை வரும் நாளை எண்ணி
இப்பொழுதே உறக்கம் துறக்கிறேன்.


சின்னுவே, நீயும் என் செல்லமே - என்றும்
எனக்கு வெள்ளமாய் இனிக்கும் தங்கமே.

எழுத்தோலை!

மின்னி, மின்னி ஒளிரும் கண்களோ...


May`17

வட்ட நிலவுக்கு எப்படித்தெரியும்,
மொத்தமாய் தன்னை விழுங்கிய -
நாகமும், கன்னி வேடம் பூண்டே
மண்ணில் வந்து உலவுமென்று...

மின்னி, மின்னி ஒளிரும் கண்களோ
தலை ஆசைக்கா பார்த்திட தூண்ட
பளிரென்று ஜொலிக்கும் இதழ்களை
பார்திடாமலே இருத்தலும் நன்றே.

எழுத்தோலை!

நிலைப்புரியா தவிக்கிறேன்...


May`17

தெளிந்த நீரோடையில் நீந்தும் 
மீன்க்குஞ்சிகள் யாவும்,
நீருக்கு சொந்தமோ - இல்லை 
நில, நீர் வாழ் தவளைக்கு சொந்தமோ?

இப்படிதான் நானும், 
யாருக்கு சொந்தமென்று தெரியாமல்,
நிஜத்திலும், நித்திரையிலும் 
நிலைப்புரியா தவிக்கிறேன்.


எழுத்தோலை!

எல்லாம் மறைந்ததே...


May`10

கண்களே... நீ கண்டதென்னவோ 
தென்றலாய் அவள் வந்து சென்றதே,
இன்னும் ஏனோ நீ தேடி தேய்கிறாய்
காற்றையும் காண இயலுமோ,
நிமிடங்கள் வீசி சென்றதும்,
சொர்கமும் பக்கம் வந்ததும்
தேவதையவள் இன்று போனதும் 
எல்லாம் மறைந்ததே,
தேவதையவள் இன்று போனதும் 
எல்லாம் மறைந்ததே...

(கண்களே... நீ கண்டதென்னவோ..)

கண்களுக்குள் காட்சியாக
நின்று கொண்டவள் - அவள்
கண்கள் கொண்டே எப்பொழுதும்
என்னை வென்றவள்....,
கண்களுக்குள் காட்சியாக
நின்று கொண்டவள் - அவள்
கண்கள் கொண்டே எப்பொழுதும்
என்னை வென்றவள்....,
கவரிமானும் துணையை இழக்க
துடித்து இறக்குமே - நானும்
கவரிமானாய், கவிதை தானே
எழுதி இருக்கிறேன்,
கண்களுக்குள் குளங்கள் கட்டி
நீந்தி திரிகிறேன் - உன்
கண்களை மட்டுமே நம்பி இருக்கிறேன்..,

(கண்களே... நீ கண்டதென்னவோ...)

நித்தமுனை காண காத்திருக்கும் பக்தனிவனிடம்
இன்னும் என்ன தயக்கம், போதும் போதும் நில்லடி,
நித்தமுனை காண காத்திருக்கும் பக்தனிவனிடம்
இன்னும் என்ன தயக்கம், போதும் போதும் நில்லடி,
கடிகார முற்களை முந்தி சுழல்பவனிடம்
கணநேரம் நின்று பேசிட, மோதும் மோதும் இதயமே,
காத்திருக்கும் என் ஐந்துப்புலனும் காத்திருக்குமே,
உன் ஒற்றை சொல்லும் உதிரும் வரை காத்திருக்குமே,
கண்களுக்குள் குளங்கள் கட்டி
நீந்தி திரிகிறேன் - உன்
கண்களை மட்டுமே நம்பி இருக்கிறேன்..,

கண்களே.... நீ கண்டதென்னவோ
தென்றலாய் அவள் வந்து சென்றதே,
இன்னும் ஏனோ நீ தேடி தேய்கிறாய்
காற்றையும் காண இயலுமோ,
நிமிடங்கள் வீசி சென்றதும்,
சொர்கமும் பக்கம் வந்ததும்
தேவதையவள் இன்று போனதும்
எல்லாம் மறைந்ததே,
தேவதையவள் இன்று போனதும்
எல்லாம் மறைந்ததே...


எழுத்தோலை!

என் வசம் ஆசுவாசமாய்...


May`09

பனிக்கூழ் குழைவில் 
உலர்த் திராட்சையும், முந்திரியும் கலந்து 
சக்கரையும், குங்குமமும் சேர்த்தே பிசைந்து 
பெற்றாளோ இல்லை செய்தாளோ உன்னை 
உன் அன்னை...

பார்த்திட, பார்த்திட பசிக்குதடி,
பருவம் இழந்தும் துடிக்குதடி,
குடிக்கவா, கடிக்கவா இல்லை உன்னை 
அப்படியே சாப்பிடவா?

சொல்லிவிட்டு நில் போதும் - மற்றவை
என் வசம் ஆசுவாசமாய்.

எழுத்தோலை!

முரண்டுப்பிடிக்கும்...

May`09

உன்னை நினைக்காமல் நொடிப்பொழுதும் 
மரிக்காதுப் பெண்ணே எனக்கும் - செரிக்காத 
உணவைப்போல் எனை ஏனோ, கக்கிவிட 
எத்தனித்து விக்கி நிற்கிறாய்,

அவதானித்து அமைதியாய் அளந்துப்பார்,
அரைநொடிக் கொருமுறை மணியடிக்கும் 
என் எண்ண அலைகள் எல்லாம் அப்படியே 
என்னைப்போல் உன்னுள் முரண்டுப்பிடிக்கும்.

எழுத்தோலை!