Sunday, December 9

தமிழுக்கு தலைவணங்கு!


Nov`28

சிந்தையில் அழுந்தும்
முந்தய மொழிகளில்,
என் தமிழுக்கு நிகர்,
எம்மொழியும் உண்டோ?

தமிழுக்கு தலைவணங்கு!


 
 
எழுத்தோலை !

குயிலோ அவளும்!


Nov`28

கூவும் குயிலின் ராகம் கேட்க,
சுற்றிலும் தேடினேன் குயிலும் இல்லை,
கைப்பேசியுடன் குமரி யொருத்தி,
கொஞ்சலாய் கதைத்தபடி வருவாளோ,

குயிலோ அவளும்.!



எழுத்தோலை!

it`s all about you!


Nov`27

என் முதல் முயற்சி, ஆங்கிலத்தில்!

பிழைகள் இருந்தால் கூறுங்கள், அறிஞர்களே!

It`s about to you,

it`s about to you,
to decide the way of future,
precise the pay which you received,

it`s about to you,
it`s about to you,
no matter what you earned,
so what, the thoughts are fresh,
move on, the future is yours,
go on the further steps,
keep aside the pains in veins,
treat yourself as you are,
the fruitful destiny clearly says,

you are the HERO, you are the HERO,

it`s all about to you,
it`s all about to you,
as every morning start with shines,
clouds may cover, but never stays,
why don`t you start with,
just like a sky?
keep away your negatives,
as like a clouds,

it`s all about you, it`s about you.



RK!

ஐக்கூ !


Nov`26

ஐகூ கவிதைகள்:
-----------------------



1. மாநகர தெரு விளக்குகள்! (Street Lamps in Chennai)
-------------------------------------------------------
--------------------------------------

விடிந்தும்,
அனையமறுக்கும்
மஞ்சள் நிலவுகள்.


2. காக்கை ர(ரா)கம்! (Crows' vocalizations)
----------------------------------------------------

கரைவதும் ஒரு சுகம்,
அதில் நனைந்திடும்
பிணைக்கு.


3. சாவி! (Key)
------------------

துளை சேரா,
நுழைய வழிக்
கொடுக்காத பாவி.


4. கடிகார முட்கள்! (Clock Thorn)
------------------------------------------

குத்திடும் முள்,
சுத்தி காட்டிடும்
தருணம்.


5. கரிக்கோல் முனை! (Pencil Tip)
-------------------------------------------

சீவிட, சீவிட,
கொட்டிட செய்யும்
எண்ணங்களை.


6. நிலைக்கண்ணாடி! (Mirror)
--------------------------------------

சின்னதாய் பொய் சொல்லி,
தன்னெதிர் நிற்பவரை - அனந்த
மழையில் நனைக்கும்.


7. அலைப்பேசி! (Mobile)
--------------------------------

கை மடக்கி, திறந்து
பார்த்தேன் - உள்ளங்கையில்
ஓர் உலகம்.


8. சாராயம்! (Liquor)
--------------------------

ஊமையையும் பேசவைக்கும்,
உலகமதை சுற்றிக் காட்டும்,
ஊற்றில் கிடைக்காத நீர்.


9. தமிழக மின்! (TNEB)

சில நாட்களாய், ஒடுக்காளி
பட்டம் பெற்ற - ஒளிகொடுக்கும்
சக்தி.


10.தானியங்கி படிக்கட்டு (Lift / Stair Cases)
_________________________________________


ஏற்றிவிட்டவனையும்,
இறக்கிவிடும் - இரக்கம்
இல்லா இதயம்.


11. சீப்பு! (Comb)
---------------------

சாலை செப்பனிட
முட்களும் உதவுமோ,
முகத்திற்கு மேல் தாவுமோ.



எழுத்தோலை!

மாறாமல் தோற்றே!


Nov`25

பறக்க நினைத்து
விழுந்து எழுவதும்,
இறக்கை விரித்து
இறங்கி நடப்பதும்,
விழிக்க மறுத்து

தூங்கி வழிவதும்,

பிழைப்பைக் கெடுக்கும்
நினைப்புகளோ - இல்லை,
மனமென்னும் குரங்கின்,
கிளைத் தாவல்களோ,

மனிதன் குரங்கிலிருந்து
தாவா, தாவி மரக்கிளைகளை,
நிரப்புகிறான் - அங்கும்
இருக்க மனமின்றி,
மீண்டும் தாவுகிறான்,

மாறி, மாறி - மாறாமல்,
தோற்றே!
 
 
எழுத்தோலை !

விடா முயற்சி!


Nov`24

சிட்டுக் குருவிகள் எல்லாமதன்,
சிறகின் பலத்தை அறியுமாயின்,
கிளைகள், இலைகள் எல்லாம்,
வெறும் சாலையோர நிழற்க் குடைகளே.,

மனிதனின் சிறகும்,
விடா முயற்சியோ!


எழுத்தோலை!

பெற்றேன் அன்பை!


Nov`23

அவிழ்தம் கொண்டவன் நோய்,
ஓர் நாளில் ஓடுமோ, ஓடா
தனு, உயிர் எல்லாம் ஒன்றி,
நொடிப் பொழுதெல்லாம் - மண்டிக்
கிடக்குமோ அன்பும்,


பெற்றேன் அன்பை,
தாயிடம் தொடங்கி,
தமக்கையிடம் பொங்கி,
தோழி, நண்பன், அண்ணன்,

என்று என்னை போல்
என்னையே காதலிக்கும்,
இதயம் எல்லாம் கொண்ட,
சுற்றமும் சூழ அன்பின்
அடையாளம் நீங்கள்
அல்லவா, மெய் சிலிர்த்தேன்.

(அவிழ்தம் = மருந்து,
தனு = உடல்.)



எழுத்தோலை!

தோழிக்கு ஒரு வாழ்த்து!


Nov`22


இனிதானதொரு மொழிப்பேசும்,
கனிவானப் பெண்ணோ நீயும்,
கனவாகக் கண்ட உன்நெதிர்க்
கால எண்ணங்கள் எல்லாம்,

கடலளவில் இருந்தால் கூட,
உன்னை தேடி வந்திடும் நாளை,
தயங்காமல், தளராமல்
முயன்றிடு தோழி, முடியாத
செயல் எதுவுமில்லை, என்றே.

வாழ்த்துகள் என் இனிய பிறந்த
நாள் வாழ்த்துக்கள், நூறாண்டுக்
காலம் நீயும் வாழ்ந்திடுவாய்,
அதுவரை, உன் நண்பனாய்,
நானும் இருந்திடுவேன்.

 
எழுத்தோலை!

நீல மயில் கழுத்துக்காரி!


Nov`22

நீல மயில் கழுத்துக்காரி,
நில்லடி கொஞ்சம் - என,
சொல்லி கெஞ்சும் எனது,
சொல்லை கேட்டும் - ஏனடி,
நின்றும், நில்லாமல் எனை,

கொள்ளாமல் கொள்கிறாய்?

தண்டனைக் கைதி, கண்ணால்
ஆவேனோ - உன் கண்ணாலே,
நானும் காணாமலே போவேனோ,
கொண்டைப்பூவும் சிரிக்குதடி,
கொடியிடையும் அழைக்குதடி,
குமரி முனை வள்ளுவனும்,
சொல்லியப்படிஉனையென்று,
அள்ளியப்படி தூக்கிப் போவேனோ?

தூங்காமல் துன்பம்,
தாங்காமல் இன்பம்,
வாங்காமல் இதயம்,
ஏங்காமல் இமயம்,
இதையும், எதையும்,
எனக்கென்றொரு வாழ்வும்,

கொடுப்பாயோ காதலியே,
கனவில், தினமும் நான் காணும்,
உருவமில்லா ஊர்வசியே.?



எழுத்தோலை!

வாசம்!


Nov`21

இத்தனை நாள் எல்லாம்,
ஏதோ,
நேற்றோடு முடிந்தபோனக்
காட்டறாய் - ஒரு நிசப்தம்,

பரிவு அற்ற பிரிவு,
முறிந்து விழுந்த முருங்கை,
செறிவு குறைந்த அறிவு,
எல்லாம் எனக்கான - இலை
மறைக் காய்களோ?

இன்றும், லேசாய் வீசும்
காற்றும் - ஏனோ சுமந்து,
வந்து என்னிடம் சேர்க்கிறது,
அவளது வாசமதை.


எழுத்தோலை!

நெஞ்சம் மறக்கவில்லை!


Nov`21

இன்றுப் பிறந்தநாள்க்
கொண்டாடும் அனைத்துயிர்களும்,
என் இறந்த நாளையும்
கொண்டாடுங்கள் - ஆம்
இன்றே என்னைத் துறந்தவளின்

பிறந்தநாளும் கூட,

நெஞ்சம் மறக்கவில்லை..,
அவள்ப் பிறந்தநாளை
மட்டுமல்ல,
அவளையும் தான்.



எழுத்தோலை !

எவரேனும் சிந்தித்ததுண்டா?


Nov`15
 
குப்பைகள் படர்ந்த
தெருக்களில், பனிக்கால
மூட்டம்ப் போல், அடர்ந்த
புகைக்குள் இருந்து,
நானும் இருமியப்

படியே கடக்கிறேன்,

எங்கே கண்ணிவெடி,
எவரேனும் வைத்தனறோ,
என்னும் சலனம் லேசாய்
என்னுள் எழும்பி மறைய,
கால் எடுத்து வைத்து,
பார்த்து, பார்த்து
நடக்கிறேன்,

கொட்டாங்குச்சியில்
மறைத்து வைத்த அணு
குண்டு, எனக்கெப்படித்
தெரியும், தெரியாமல்
சென்றுவிட்டேன் அருகில்,
அலறியப்படி ஒருவர்
பார்த்து அங்கே .....,
சொல்லிமுடிப்பதற்குள்,
வெடித்துச் சிதறுமோ,
கொட்டாங்குச்சி
சில்களாய் தெறிக்குமோ,
சறுக்கி, வழுக்கி
ஒருவழியாய் முழிப்
பிதுங்கி நிற்கிறேன்,
மீண்டும் நடையை
தொடங்குகிறேன்..,

ஏவுகணை கண்டறிந்த
விஞ்ஞானிகள் போலே,
எதிர் வீட்டு ஜன்னலை
இலக்காய் ஏவும் ஒருவன்,
குடிசைகள் நிறைந்த
பகுதியை பதம்ப்
பார்க்கும் சிறுவன் ,
பார்த்துக் கொண்டே
பீதியில் படபப்புடன்
நகர்கிறேன்..

ஐயோ தீ!
பத்தி எரியுதே,
காப்பாத்துங்க ...
அலறல் எதிரொலிக்க,
ஓட்டமாய் கூட்டம்,
தீயணைப்பு வண்டி
வந்துசேர வழிக்
கிடைக்கா தவிக்க,
தரைமட்டம் ஆகிப்
போன பத்துக்கு,
பத்தே இருந்த,
பல நூறு குடிசை
கூட்டங்கள்,
சோர்கிறேன்..,

நின்றுப் போன பட்டாசு
சத்தமாய் ஒரு அமைதி,
நெஞ்சுக்குள்,

மேலெழும்பி வெடிதிதுச்
சிதறி - பூப்பூவாய்,
சிவப்பு, நீல, பச்சை
கலவையில் நெருப்புச்
சிதறல்கள் - கண்ணிமைக்கும்
நேரத்தில்,
கண்மறைந்து போகுமோ?

அரைமணிநேர
ஆனந்தம்,
புஸ்சென போன
குருவி வெடியாய்,
ஏமாற்றி போனதே
ஆயிரம், ஆயிரம்
ரூபாயை..,

எந்த புராணத்தில்
வெடி, வெடிக்க
சொல்லியிருக்கு?
எந்த இதிகாசத்தில்
தீபாவளி தமிழனுடைய
பண்டிகை என்றிருக்கு?

காற்றை மாசாக்கி,
காசை கரியாக்கி,
அப்படியொன்றும்
புதிதாய் ஒரு நல்ல
நேரம்,
யவர் வாழ்விலும்
பிறந்ததாய் தெரியவில்லையே,
இன்றுவரை.

எவரேனும் சிந்தித்ததுண்டா?



எழுத்தோலை!

Wednesday, November 21

மத சார்பற்ற நாடிது


கைப்பேசியில் அலறும் ,
இறைப்  புகழ்ப் பாடும்
அழைப்பு மணிகளும்,
நாமங்களும்,
பட்டைகளும்,
நகமும், சதையுமாய்,
நம்மைவிட்டு என்றும்
பிரியாதோ,

மத சார்பற்ற நாடிது
வென்பதை,
மறக்கிறேன்,
கொஞ்சம் கொஞ்சமாய்.



எழுத்தோலை!
www.facebook.com/ezutholai

Monday, November 12

இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!


முறுக்கிப் பிழிந்த
முறுக்கு சிக்கல்கள்,
கடிக்கும் தருணம்
கர, முற வென
நொறுங்கும்,


வாழ்வும் அப்படியோ,
சிக்கலாய் முறுக்கிக்
கிடக்கும் இன்னல்கள்
யாவும் - நொறுங்கும்,
தருணத்தை இப்-
பண்டிகை தொடங்கி
வைக்குமோ?

வெடித்து சிதறி,
புகையாய் போகும்
தெருவும்,
குப்பையாய் சேரும்
சரவெடி,

தீமைகள் யாவும்
வெடித்துச் சிதற,
புகையாய் ஒரு
மாயை தோன்றி,
காற்றில் மறையுமோ,
இப்பண்டிகையால்,
இதுவும் நடக்குமோ?


பெரியவர், சிறியவர்,
அன்னை, தந்தையர்,
சிறுவர், சிறுமியர்,
மழலை என
அனைவருக்கும்,

என்,

இனிய தீபாவளி
நல் வாழ்த்துகள்.



எழுத்தோலை, கோ.இராம்குமார்.


"எழுத்தோலை நண்பர்கள் அனைவருக்கும்
எழுத்தோலையின் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

தித்திக்கும் தீபாவளியாம்!


Nov`11

தீயில் வெந்த பிஞ்சுக்
கரங்கள் சுருட்டிய
லட்சுமி வெடி,
கற்க வசதியின்றி,
கைக் கூலியாய்,

இருபதும், முப்பதும்,
பெற்று
நாற்பதும், ஐம்பதும்,
முடிந்த அன்னைக்கு
அன்னமிட,

அன்றாடம் காட்சியாய்,
தொலைகாட்சி
வாயிலாய்,
சிவகாசியில் தீ விபத்து,
முப்பத்தைந்து
உயிர்கள் தீயில்
கருகியது - என்கிற
செய்தி கேட்டு,
அச்ச்சோ
சொல்லி முடித்து,
அடுத்த நொடியே
பட்டாசு கடை
நோக்கிய பயணம்,

"என் தெருவிலே
எங்க வீடு வெடிதான்
கலக்குச்சி"

பெருமைக்கு
எதோ தின்னும்,
எட்டாவது
வீட்டுக்கரனாய்,
எத்தனை, எத்தனை
பேர்?

தீயாய் பொசுங்குதடி,
கரியாய் போகுதடி,
புகையாய் பரவுதடி,
காசும் - மனசும்,

தித்திக்கும் தீபாவளியாம்,
கசக்கிறது எனக்கு.



எழுத்தோலை, கோ.இராம்குமார்.

காக்கை குளியலாய், தண்ணீர் சிக்கனம்!


Nov`11

நீர்த் தேக்க
தொட்டியில்
நிரம்பி வழிந்த நீர்,
தரை தொட்டு,
குட்டையாய்

தோன்றி,
காக்கைகள்
குளிக்க - நீச்சல்
குளமாய் மாறுமோ?

ஆறு, குளம்
இல்லா நகரில்,
இரண்டு மணிநேர
மின்வெட்டு
முடிந்தும், மறு -
நாள் வரும் வரை,

நீரின்றி அமையா
இவ்வுலகில்,
நீரித்தேடி திரிவதும்
இதனால் தானோ?

காக்கை குளியலாய்,
தண்ணீர் சிக்கனம்.


(தண்ணீரை சேமியுங்கள்!)

எழுத்தோலை, கோ.இராம்குமார்.

வீண் பேச்சு!


Nov`10

கிசு கிசுத்த
பேதையின் பேதமையும்,
பேசியிருக்க,
சேர்ந்திருக்க கூடாத
நட்பும்,

விளைவித்த வினையும்,
பகையோ?

மூங்கில்
காடொன்றில் தீயும்,
சிறுதுளி
விழுந்து கனிய - பரவும்,
நெருப்பின் வேகம்,
ஒளியை மிஞ்சுமோ?

வீண் பேச்சு,
பொசுக்கியது மலரொன்றை.


எழுத்தோலை, கோ.இராம்குமார்.

இனிய பிறந்தநாள் வணக்கங்கள், உலக நாயகனே!


Nov`07

மகா விஸ்ணுவின்
மருவுருவாய்,
ரூபங்கள் பல ரூபங்கள்,
அவதாரங்கள், பூண்டே
விஸ்வரூபம் கொண்டாய்,

இறைவனோ நீயும் இத் -
திரை உலகிற்கு - அதனால்
தானோ, ஆனாய் உலக
நாயகனாய்...

கமல ஹாசனே நீயே
என் சகலமும், சுவாசமும்
சந்தோஷமுமானாய்...

வணங்கி வேண்டுகிறேன்
இறைவனாம் உன்னை
உன்ப் பிறந்த நாளில்
இன்றும், என்றும் - உன்
ரசிகனாய் நானும்.

இனிய பிறந்தநாள் வணக்கங்கள்,
உலக நாயகனே!



எழுத்தோலை, கோ.இராம்குமார்.



புகைப்பட உதவி: Falcon Designers.

வழியும், உண்டோ?


Nov`04

விலகி,
இருப்பதால் - யவர்க்கும்
வேதனை உண்டோ ,
கண்கள் கலங்கி,
குளமாய் தேங்கி,

வழியும், ஓடும்,
வாய்க்காலாய் மாறும்,

பிரிவு!
வேதனையின்
மழைக் காலமோ?
சேரும், சகதியும் நிறைந்த,
தார் சாலையாய்,
சேலையில் முந்தானையாய்,
சொருகவும் முடியாமல்,
பறக்கவும் முடியாமல்,
பறந்தே, இணைந்தே,
இருப்பதைப் போன்றே,

பார்க்காமல், பேசாமல்
இருந்திடவே வழியும்,
உண்டோ?


எழுத்தோலை, கோ.இராம்குமார்.

என்னையும் அறியாமலே!


Nov`01

உருவில் திரு உருவில்,
உமையாள்(உமா), ராஜேஸ்வரி,
என் உடன்ப் பிறக்கா
சகோதரிகள் நீங்கள்,
தான் ஆடாவிட்டாலும்

தன் தசையாடும் என்பதை
உண்மையில் உணர்ந்தேன்,
உங்கள் துடிப்பில் நானும்,

என்னையும் கேட்காமலே,
என் நிலை யறிந்து,
எங்கிருந்தோ வந்தே,
என் இன்னலை போக்க,
கடலலையாய் என்
கண்களில் கண்ணீர்
உருளுமோ என்னையும்
அறியாமலே,

நெருஞ்சி முள் குத்திய
இதயத்தில் மயிலிறகில்
மருந்திட்டு, வலிகளும்
பறந்திடவே செய்தாயே,
அன்புள்ள சகோதரியே,
நீயும் - எனக்கு,
இன்னொரு அன்னையோ ?
உயிர் பிரியும் வலியை,
உன்னுயிர் மட்டுமே
அறியுமோ - அழைக்காமலே,
தவமிருக்காமலே,
கண்முன் தெரிவாயோ?

இருக் கைகள் கொண்டே
வணங்குகிறேன் - தெய்வமாய்
உன்னை, - என்றும்
அழியா உறவைப்
பெற்றேன் தம்பியாய்,
நானும் என்றென்றும்
இருந்திடுவேனே - உன்
சொல்க தவறா
நடந்திடுவேனே.


அன்பு தம்பி,
எழுத்தோலை, கோ. இராம்குமார்.

வெறுமை!


Oct`30

மன்றம் நுழைந்த
தென்றலாய் தானே
நானும் இருந்தேன்,
இதுநாள் வரையில்,
ஏனோ - யாரோ

கதவடைத்துப்
போவாறோ,

தானே சரிந்த
மரமாய்,
சட்டென்று நின்ற
ரயிலாய்,
இறகை மூடிய
பறவையாய்
ஒரு வெறுமை,

என்னை ச்சுற்றிலும்,
ஏகாந்தம் சேர்த்துக்கொண்டு,
ஏளனமாய் பார்க்கிறதே!


எழுத்தோலை, கோ.இராம்குமார்.

வாழ்வா - சாவா!



Oct`30

மரண தண்டனைக்
கைதியாய்,
தூக்குக் கயிற்றை
எதிர்நோக்கி -
எண்ணிக்

கொண்டிருக்கிறேன்
மணித்துளிகளை -
சில நாட்களாய்,

மரணம்!
நானே என்னை
மாய்க்கும்முன்,
தானே வருமோ - என்
தலையைக்
கொய்யுமோ?

வாழ்வா - சாவா
போராட்டத்தில் - வாள்
முறிந்த வீரனாய்,
யானும் - ஏனோ
வாள்க்கொடுக்க,
யாருமின்றி,
தலைக்கொடுத்து
வீழ்வேனோ ??

 
 
எழுத்தோலை, கோ.இராம்குமார்.

கோமாளி!


Oct`29


இன்னல்கள் இடையுறா
தொடர்வதும் - பின்
தளர்வதும்,

சவாலே - சமாளி,
என்பதை உணர்துவதர்க் -
காகவோ?

சமாளிக்க தெரியா
தவிக்கிறேன் - நானும்
கோமாளியாய்.
 
 
எழுத்தோலை, கோ.இராம்குமார்.

கனவின் உச்சம்!


Oct`24

ஊடல் பொழுதில்
மயக்கம் கொண்டேன் -
காதலனே,
கண் முன் கண்டேன்
உன்னை,


கட்டியணைத்து,
முத்தமிட்டு,
கடித்திலுத்தேன் உன்
இதழை என் இதழில்,
ஆசையால் நீங்கா
ஆசையால்,

ஆர்ப்பரித்து ஆனந்தத்
தாண்டம் ஆடியவளைப்போல்
சிலிர்த்துப் போனேன்,
சிலநேர அசைவில்,
சிலுமிச விளையாட்டில்,
கட்டில் உடைந்ததில்
விழித்தெழுந்தேன்,

கனவின் உச்சம்
என்னை மிச்சம்
விட்டதால்.

 
 
எழுத்தோலை, கோ.இராம்குமார்.

கழுகின் கூர்மை!


Oct`17

வட்டமிடும் கழுகும்
தானோ, திட்டமிட்டு,
கண்ணைச்சுருக்கி,
காத்திருந்து, கொத்தி
சென்றிடும், இரையை

தரை இறங்கியே,

அதுப்போல் தானே,

எழுத்தோலையின்,
கவிதை தோகையதனில்,
முன்னூறாவது இறகாய்,
தோகை மயில் தோழி
நீங்களும், காத்திருந்து
இணைந்தீறோ,

கண்டேன்,
கழுகின் கூர்மையைக்
உங்கள் கண்களில்,
உளம் மகிழ்ந்தே.

நன்றி மிக்க நன்றி!
 
 
 
எழுத்தோலை, கோ.இராம்குமார்.