Friday, February 10

அவள் வருவாளா ?



கைக்கெட்டிய கனி இருந்தும்,
உச்சிக்கிளை ஏறி உலிக்கிட உதிர்ந்திடும்
நெல்லிகனியாய் புளித்துப்போனதோ நம் காதல் !

உன்னோடு நடந்து போன தெருக்கள் - அன்று
ஏனோ, இல்லை மின்வெட்டால் இருளாய் ...
உன்னோடு சண்டையிட்ட பூங்காக்கள் - அன்று
ஏனோ, இல்லை ஆறுமணிக்கு மேலாய் ....
உன்னோடு பேசிய செல்போன் இணைப்பு - அன்று
ஏனோ இல்லை போஸ்ட் பெய்ட் போனாய் ...
உன்னோடு ஊர்சுற்றிய ஞாயிற்று கிழமைகளில் - அன்று
ஏனோ இல்லை என்னிடம் ஆயரம் ரூபாய் ...

இதனால் தான் நீ என்னை, பிரிந்தாயோ !

வருடா வருட காதலர் தினமன்று - உனக்கு
கொடுத்த, புது அலைபேசிகள் கூட என்ன நினைத்திருக்கும்,
என்னை கட்டிப்பிடித்து தூங்குவதாக சொல்லி - நீ
கட்டியணைத்து தூங்கிய கரடி பொம்மையும் கூட என்னை புரிந்திருக்கும்,

எப்படியடி நீ மறந்தாயடி?

உனக்கு பிடிக்கும், உனக்கு பிடிக்கும் என்று
எனக்கு பிடித்ததை கூட மறந்து போனேன்,
நினைத்து பார்க்க, நெஞ்சு துடிக்கிறது,
நீ இல்லாத இன்றைய பொழுது.

நிஜம் இல்லை பொய்தானோ என்று - நீ
வருவாய் என காத்திருப்பேன் காதலர் தினமன்று...



:::::::: இராம்குமார்கோபால் :::::::::


No comments: