Monday, February 13

புலம்பல் !


என்ன சொல்ல வந்தேனோ,
ஏதோ சொல்லி நின்றேனே.
இல்லா உலகில் இருப்பது போல்,
கனவுகள் கண்டுக்களித்தேனே ...

என்ன சொல்ல வந்தேனோ
ஏதோ சொல்லி நின்றேனே (2 )

சில்லென்ற தென்றல்ககாற்றை நானுமே
சேர்த்துவைக்க காத்திருந்த நேரமே
புயல் வந்து புலம்பெயர்ந்த அடிவேராய்
திசைமாறி குடியேறும் - அவளின்
மேல், மெல்லியதொரு மேலாடையாய் !

என்ன சொல்ல வந்தேனோ,
ஏதோ சொல்லி நின்றேனே.
இல்லா உலகில் இருப்பது போல்,
கனவுகள் கண்டுக்களித்தேனே ...

என்ன சொல்ல வந்தேனோ,
ஏதோ சொல்லி நின்றேனே.(2 )

மழைமேகம் தோரணங்கள் போலவே
மாலைந்நேரம் சாரலும் தூரவே
மதியிழந்து மயங்கியே நானுமே
மதிலோரம் சாய்ந்திருக்கும் அவளின்
மேல், சுவரொட்டி காகிதமாய் !

என்ன சொல்ல வந்தேனோ,
ஏதோ சொல்லி நின்றேனே.
இல்லா உலகில் இருப்பது போல்,
கனவுகள் கண்டுக்களித்தேனே ...

என்ன சொல்ல வந்தேனோ,
ஏதோ சொல்லி நின்றேனே. (2)

::::: இராம்குமார் கோபால் ::::::



No comments: