Monday, February 20

தேடல் !


நிலா முற்றத்தில்
நிழல் மாற்றத்தில்
நிஜம் தொலைத்த தேடலில்
நீங்கா உந்தன் நினைவலையில்
நீண்டநேர காத்திருப்பில் - நீ
வராத சோகம் கண்ணை கிள்ள
வார்த்தை யாவும் மறந்துப்போக
கடைசி ரயிலும் போனதடா - என்மேல்
கோவம் ஏதும் கொள்ளாதேடா
நீ மட்டும் போதும், என்றும் - என
என் நெஞ்சில் ஒலிக்கும் ராகம் எட்டும்
நீங்காத ரீங்காரமாய் என்றும் - உன்
தோள் சாய்ந்து உறங்க வேண்டும்
தவறேது செய்தேன் அன்பே ! - என்
தவம் நீயே ! தாயும் நீயே !!
தாலாட்டு, தமிழ்ப்பாட்டு எல்லாம்
உன் பெயராய், உச்சரிக்கும் நானும்
நீ இன்றி நிலத்தில் புதையும்
பிணமாய் மக்கி போவதே மேலோ ?



::::: இராம்குமார் கோபால் ::::::


No comments: