Saturday, February 4

பொய்!


அச்சில் வார்த்த சிலை வடிவும்,
அரசியை ஒத்த அலங்காரமும்,
அவள் அழகை சொல்லும் உவமைகளாய் !

அரியணை அமர்ந்த, அதிகாரமும்,
தலையணை சாய்ந்த, தலைகனமும்,
அவள் பண்பை உணர்த்தும் புதுக்கவிகளாய் !

பார்க்கும் பார்வையில், வெட்கமும்,
சிரிக்கும் சிரிப்பினில், அடக்கமும்,
அவள் இயல்பை காட்டும் எழுத்துக்களாய் !

என்னை மயக்கிய அவள் கண்களும்,
காதலில் அவளது, பெண்மையும்,
சிரித்து பேசியதெல்லாம், பொய்களாய் !

பொய்யாய் போன வாழ்கையில்,
கரைந்தோடும், கண்களில் கண்ணீராய் !!


::::: இராம்குமார் கோபால் ::::::



No comments: