
அச்சில் வார்த்த சிலை வடிவும்,
அரசியை ஒத்த அலங்காரமும்,
அவள் அழகை சொல்லும் உவமைகளாய் !
அரியணை அமர்ந்த, அதிகாரமும்,
தலையணை சாய்ந்த, தலைகனமும்,
அவள் பண்பை உணர்த்தும் புதுக்கவிகளாய் !
பார்க்கும் பார்வையில், வெட்கமும்,
சிரிக்கும் சிரிப்பினில், அடக்கமும்,
அவள் இயல்பை காட்டும் எழுத்துக்களாய் !
என்னை மயக்கிய அவள் கண்களும்,
காதலில் அவளது, பெண்மையும்,
சிரித்து பேசியதெல்லாம், பொய்களாய் !
பொய்யாய் போன வாழ்கையில்,
கரைந்தோடும், கண்களில் கண்ணீராய் !!
::::: இராம்குமார் கோபால் ::::::
No comments:
Post a Comment