Saturday, February 18

சேலைவனம் !


மலர்ச்சோலை, பூமாலை
மதிமயக்கும் அதன் வாடை
இவைப்போன்று ஒருவேளை - அவள்
அணிந்திருந்தாள் பட்டுசேலை.

பறந்திருந்த சேலை தலைப்பும்

சிறியதாய், அவளிடைத்தனை காட்ட ,
ஆஹா! என்ன அழகு, கண்கள் சொன்னது !

சேர்ந்திருந்த கொசுவமடிப்புகள்

கொஞ்சமாய், கீழிறங்கி கிடக்க
ஐயோ! என்னை விட்டுவிடு, இதயம் சொன்னது !

மறைந்திருந்த மாராப்பும் மெல்லியதாய்

மறைத்தும், மறைய மறுக்கும் களிநுதுப்பு
ஆஹ் ! வேண்டுமா என்னை, என்றது !

மொத்தமாய் சொல்வதெனில் - அவள்
முந்தானை முடிச்சினிலே சிக்கிக் -
கொண்டேன், படு முடியாய் விடியும்வரை.


விடிந்தால் மறந்துப்போகும் கனவுதனில் !


:::: இராம்குமார் கோபால் :::::



No comments: