Showing posts with label திருக்குறள் கவிதை உரை. Show all posts
Showing posts with label திருக்குறள் கவிதை உரை. Show all posts

Wednesday, February 20

குறள் 71

வள்ளுவம் காப்போம், வாருங்கள்!
-----------------------------------------------
குறள் பால்: அறத்துப்பால்.
குறள் இயல்: இல்லறவியல்.
அதிகாரம்: அன்புடைமை.

குறள் 71:
------------

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்"

உரை:
--------

கதவுகள் இல்லையடி என்
அன்பிற்கும்,
பூட்டிட இங்கு வழியுமேது,
சொல்லாமல் கொட்டும்,
பேசாமல் பேசும் - உன்
துன்பதனை காணுமிடத்தில்
தவழ்ந்தோடும் என்
கண்ணீரும்,

கதவுகள் இல்லையடி என்
அன்பிற்கும்.
எழுத்தோலை!



Sunday, February 17

குறள் 833

வள்ளுவம் காப்போம், வாருங்கள்!
-----------------------------------------------
குறள் பால்: பொருட்பால் .
குறள் இயல்: நட்பியல்.
அதிகாரம்: பேதைமை.

குறள் 833:

"நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்."

உரை:

நகம் கடித்து,
கால் விரல் நிலத்தை கிழித்து,
நாணுவர் பெண்டீர் - தன்
பினையைக்கண்ட தருணம்,
அவளன்றோ பெண்ணும்,
ஆங்கே தவிர்க்கும் அவளும்,

வேண்டுவன எல்லாம்
வேண்டும் எனும் ஆசை
கொண்டும் - தன்னிடத்தே
தானே வரவேண்டும் என்றே
தேடலை விடுத்து - வேண்டுவர்
எவரும்,

துணையாய்,
மனையாள் ஒருத்தி
காதல் சீக்குண்டு,
மணாளன் முகம் காணா,
மயக்கமும் கொண்டிருப்பவளை
மறந்து - மாசில்லா
காதலை கள்ளி ஒருத்தியிடம்
கட்டவிழ்க்கும் அவரும்,

தேனினும் இனிதாம்,
மலரினும் அழகாம்,
பொன்னினும் அரிதாம்,
எதையும் பேணிடா
மறந்தே - காக்காதிருப்பவர்
அனைவரும்,

ஓரரிவில் குறைந்த
விலங்கின் குணத்தை ஒத்தே
அறிவிலிகளாய் வலம்
வருவாரோ.


எழுத்தோலை!






குறள் 1221

வள்ளுவம் காப்போம், வாருங்கள்!
-----------------------------------------------

குறள் பால்: காமத்துப்பால்.
குறள் இயல்: கற்பியல்.
அதிகாரம்: பொழுதுகண்டிரங்கல்.

குறள் 1221:

"மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது."

உரை:

சோலையில் கூடிய
வண்டுகள் போலே
பாடிக் கூடியிருந்தோம்,
நீயும் வந்தாய்,
ஒளியையும் தின்றாய்,
உறைவிடம் அடைத்தே
எங்களைப் பிரித்து
உயிரையும் குடித்தாயே,

வாழியவே நீ வாழியவே,
அந்தியே.

எழுத்தோலை!


குறள்: 1213

ஐயன், திருவள்ளுவரின், திருக்குறளுக்கு எனது உரை, கவிதை நடையில், (புது முயற்சி)
பொருள்க்குற்றம் இருந்தால் மன்னிக்கவும், தெரிவிக்கவும்,
திருத்திக்கொள்கிறேன்.

"கனவுநிலையுரைத்தல், கற்பியல், காமத்துப்பால்"

குறள்: 1213

"நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்"

-----------------------------------------------------
எனது உரை (புதுக் கவிதை வடிவில்)
------------------------------------------------------

நனவிழந்து நிற்கிறேன்,
நிழலிருந்து பெருகிய
உயிர் போலே - ஒருக்காலும்
நிற்காமல் தொடரும்
வளியாய் அவன் முகம்,
ஆழ்ந்த உள்ளம் விடுத்து
கானா உலகிலாவது என்னிடம்
வருவதால் - அங்கேனும்
அன்பை பொழிவதால்.

எழுத்தோலை!