Sunday, January 13

தமிழர் திருநாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்



உழுதிட எருதுகள் பூட்டி,
அறுவடைக்கு பிளிருகள் கூட்டி,
நெற்கதிர் சிரித்திட வேண்டி,
கழனியில் காலூன்றிடும் உழவன்,
பாருக்கெல்லாம் அவனே தலைவன்,
அவனிருக்கும் திசையிலே உதிக்குமோ,
பகலவன் தினமும் கிழக்கினில்,

உழவர் இன்றி ஓர் அணுவும் அசைந்திடுமோ,
தை திருநாளில் வணங்குவோம் அவர்களையே,
புத்தாண்டில் புது உலகம் படைத்திடவே,
புறப்பட்டு வா தோழா, உழவை காத்திடவே.

இனிய தமிழர் திருநாள் மற்றும்
புத்தாண்டு வாழ்த்துக்கள் - உலக
தமிழர்கள் அனைவருக்கும்.


எழுத்தோலை!

No comments: