Tuesday, January 1

புதுவருட பிரமாணம்!

கதறல்களும், சிதறல்களும்
முட்களாய்,   கூழான் கற்களாய்,
நிறைந்துக் கிடந்த
கடந்த வருடம் - நேற்றுடன்
சில மணித் துளிகளுக்கு
முன்னாள் கடந்துப் போனது,

இன்றோ நம் ,
கால்த்தடம் பதியும்,
இப்புது வருடம்,
பூக்களைப் பரப்பி,
புது உற்சாகம்  தந்திடுமோ?
நம்புவோம்,
நம்பி அடி எடுத்து வைப்போம்,
இடியே விழுந்தாலும்,

முயன்றதை  முடிக்காமல்
உறங்கோம்,
தளர்வின்றி தொடர்வோம்,
தாகம் தணிந்தாலும்,
தங்கம் மங்கினாலும்,
ஒருக்காலும் ஒழுக்கம் தவறேல்,
உடன் பிறவாத் தங்கைகளை
காப்போம்,
என்னும் சபதம் ஏற்ப்போம்,
அவ்வழியே நடப்போம்,
நண்பர்களுக்கும் அறிவுறுத்துவோம்,
நல்லன எல்லாம் செய்வோம்,
இல்லாதவர்களுக்கும்,
எளிவர்களுக்கும் உதவோம்,
பெற்றவரை பேணி க்காப்போம்,

எல்லாம் செய்து நற்ப் பெயர்
பெறுவோம், தரணியே போற்றும்,
நாளில் - உலக நாயகனாய் வலம்
வருவோம் இவ்வுலகை - என்றே
இன்றே சூளுரை ஏற்ப்போம்,
புது வருடத்தில், புது உலகை படைக்க.



எழுத்தோலை!

No comments: