Monday, January 7

வாழும் தமிழை வளர்ப்போம் !


ஐயன் திருவள்ளுவர் தின நாளை
முன்னிட்டு, அவருக்கான  என்
எழுத்தோலை மாலை!
-------------------------------------------

அழியாத வான் புகழை,
ஐயன் வள்ளுவனும்
தனதாக்கிக்கொண்டு,
வாழையடி வாழையாய்,
தமிழ் வளம் தழைத்தோங்க,
அறம், பொருள், இன்பம் தந்து,

உலகப் பொதுமறையாய்,
அயல் நாட்டவனும்
போற்றும்,
புகழ்ப் பாடும்,
வழித் தொடரும்,
வாழ்வியல் ஆதாரம்
கண்டோம், வென்றோம்,
உங்களால் நாங்கள்,

தமிழும், தமிழரும் இரண்டாயிரம்
ஆண்டுகள் முந்தய பழமை என்பது
பொய்யே,
இருபதினாயிரம் ஆண்டுகள்
பழமை உண்மையை,
கடலுக்கடியில் புதைத்துவிட்டு,
ஒன்னும் தெரியாத பிள்ளைகள் போலே,
உலா வரும், தமிழர் நாமோ?

சிந்தையில் அழுந்தும்
முந்தய மொழிகளில்,
என் தமிழுக்கு நிகர்,
எம்மொழியும் உண்டோ?

தமிழுக்கு தலைவணங்கு,
இன்று ஐயன் வள்ளுவனுக்கு
சிறந்த நாளாம் - அவர்ப்
பாதத்திலும் விழுந்து வணங்கு,

வாழும் தமிழை வளர்ப்போம் - நம்
பிள்ளையைப் போலே பேணிக் காப்போம்.


எழுத்தோலை!

No comments: