Wednesday, January 2

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அனோஸ்கா!


அன்பு முகம், ஆசை முகம்,
இரண்டும் ஒன்றர கலந்த,
ஒளிமுகம் கிள்ளை -
இளவரசி முல்லை,

சித்திரமே, சென்பகமே,
செந்தமிழ் சொல்லை,
சொல்ல, சொல்ல
மயக்கம் தரும் குரலை,

கேட்டிட, கேட்டிட
கிளியும், குயிலும்,
கூட்டாய் கூட்டை,
அடைந்திடும் ஞாபகமே,

தலை(தல) மகள் நீயும்,
தரணியை ஆளவே,
பிறந்து, தவழ்ந்திட்ட
நாளுமோ, நாளையும் ,

நாங்கள் எல்லாம்
திளைத்தோமே - என்னவோ,
எங்கள் மகள் பிறந்த
நாளைப் போல் இன்றே,

நாட்டிய நாடகம்
நடத்திட வேண்டாம்,
நகையாய் புன்னகை
வீசிடு  போதும்,

கற்கண்டு பலகாரம்,
தந்திட வேண்டாம்,
தமிழ் சொல்லில்
பேசிடு போதும்,

கருக்கொள் முகில்
சூழ்ந்த வானம் - மழை
பெய்யும் முன்னே - நம்மை
சூழ்ந்திடுமோ - அடை
மழை கடலில் - அள்ளி
வாரி தெளித்தாலும்,
அன்னை முகம் கொண்ட,
கடல் நம்மை அனைத்திடுமோ,

அனோஸ்கா நீயும்,
மழையோ, கடலோ
வாரி எங்களை,
அனைத்துக் கொண்டாய்,
தலயும், தலைவியும்,
போலே அன்பினில்,
எங்களை சூழ்ந்துக் கொண்டாய்,

அமர்க்களம், அட்டகாசம்,
செய்திடவே - வான்மதி நீயும்,
ஆசையாய், அசலாய்,
வரலாறுப் படைக்கவே,
ரெட்டை ஜடை வயதடைந்தாய்,
ராஜாவின் மகளாய்,
ஊரெல்லாம் வீசிடும்
பூவெல்லாம் உன் வாசம் - அதைக்
கண்டுக் கொண்டோம்,
கண்டுக் கொண்டோம்,
ஆனந்தப் பூங்காற்றை,

கிரிடம் சூட்டி நாளை,
உன்னை தேரில் சுமந்தே,
பாசமலர்களாய் - உன்
முகவரியில் நிற்ப்போம்.

வாழ்க நீ பல்லாண்டு,
பல நூறாண்டு - உன் அன்னை
தந்தையைப்  போலே என்றுமே,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
எங்களுயிர் செல்ல குட்டி,
அனோஸ்கா!

எழுத்தோலை!

No comments: