Tuesday, January 15

இதில் எதுவும் எனதில்லை!



நிஜங்களை நிகழ்த்திட
நிழல்களில் தேடுகிறேன்,
நினைவுகள் மட்டுமே
இனிக்கிறதே,

கடல் மொழி காற்று,
உடல் மொழி அசைவு,
குடல் மொழி பசி,
மடல் மொழி எழுத்து,
திடல் மொழி அமைதி,
இப்படி எல்லாம்,

ஒவ்வொன்றாய்,
ஒன்றோடு ஒன்றாய்
ஒன்றன்பின் ஒன்றாய்,
ஒன்றி உரசி,
ஒருக்கணம் எனை,

பிணைக் கைதியாக்குமோ,

பிறந்த தேதி
மறக்குமோ,
மீண்டும் பிறக்க,
வழி வகுக்குமோ,
தீண்டும் நெருப்பினில்,
சொல்லெடுத்து - புதுக்
கவிதை வடித்துக்
கொடுக்குமோ,

இதில் எதுவும் எனதில்லை,
எனக்கானதும் எதுவுமில்லை.


எழுத்தோலை!

No comments: