Friday, January 4

விடியாது, கனவுகள் தானே!


நடுநிசி துரத்தலில்,
நாய்களாய்
பனிக்காற்றும்,
ஓலமிட்டு ஊளையிட,
நடுக்கத்தில்
உறைந்தோம்,
நானும்,
அவளும்,

அவள் குளிரை
நான் போக்க,
என் குளிரை
அவள் போக்க,
இரண்டறக் கலந்தோம்
போர்வைக்குள்,

காற்றுப்புகா
நெருக்கத்தில்,
பினைந்தோம்,
புதைந்தோம்,
எங்களை
மறந்தோம்,

களைந்தோம்,
ஆடை, அணிகலன்
எல்லாம்,
கோடையை,
மார்கழியில்
கண்டோம்,

கொண்டை ஊசி
வளைவாய்,
தொண்டை வரை
மோகம் - என்
கண்களில் தொடங்கி,
அவள்,
இதழ் வழி
நுழையுமோ?

இருட்டும் ஒரு
பொருட்டே,
இல்லாமல் போகுமோ,
குருட்டுப் பூனையாய்,
உருட்டல்கள்
தொடருமோ,

மிரட்டல்கள்,
போலே தொடங்கி
முனகல்கள்,
மூர்ச்சையடையுமோ,
மூச்சுப் பேச்சு
முழுசாய் நிற்குமோ,
முகம்,
வெட்கத்தில் சிவக்குமோ?
-
-
-
-
-
-
விடியுமோ,
சேவலும் கூவுமோ,
முடியுமோ,
கனவுகள்,

விடியாது,
கனவுகள் தானே,
நினைவுகள் - ஏதும்
நிஜம் பெறா வரைக்கும்.


எழுத்தோலை!

No comments: