Thursday, January 26

சிரிப்போடும், சிறப்போடும்!!


அவள் விழியில் உன் பார்வை
சேரும் இந்நேரம்
அழகான மாலை,
இடம்மாறி சிரிக்கும்.
பட்டுடை மேனி,
தங்கம் சேர்ந்து ஜொலிக்கும்.
வாழைமரம், தோரணங்கள்,
வாசலில் அழைக்கும்.
நாதஸ்வர, மேள,
மங்கள இசை ஓலிக்கும்.
வாழ்த்த வந்தவர் வயிறு,
மனம் நிறைந்து பெருக்கும்,
மனமேடை நிறைந்த
மங்கையர் சூழ,
வந்ததமரும் மணமக்கள்,

அர்தனாரிஸ்வர அவதராமாய்
ஆழம் விழும் விழுதாய்
செந்தமிழ் மொழியாய்
பல்லாண்டு காலம்
சிறக்க, இல்வாழ்க்கை
தொடங்கும் இத்தருணம்
தேவர்கள் வாழ்த்து பாட
தாய், தந்தையர், ஆசியோடு
அரியணை ஏறும் அரசன் போல்
ராஜஸ்ரீயின் கை பற்றும்
சிங்காரவேலனும் நீயோ ?

இல்லறம் தொடங்கி
நல்லறம் புரிந்து
மக்கட்செல்வம் பல பெற்று
சிரிப்போடும், சிறப்போடும்
ஆண்டுகள் பல வாழ
உங்களை வாழ்த்தும் பல
நெஞ்சங்களில் அடியேனும்
ஒருவன் !


:::::::::: இராம்குமார் கோபால் ::::::::::





No comments: