Friday, January 13

பறிதவிப்பு..


குங்குமச்சிமிழில் கொட்டிவ்வைத்த
குங்குமமாய் கன்னம் சிவந்தவளே
கொட்டித்தீர்த்த மழையோ உன் சிரிப்பு ?
துடைத்தும் என்னை விடவில்லை
என்மேல் படர்ந்த அதன் பறிதவிப்பு ...
சிதைந்து போன சிலையாய்
மலர்ந்து மடிந்த மலராய்
இலையுதிர்ந்த மரமாய்
நீர்வற்றிய குளமாய்
நித்திரையின்றி தவிக்கிறேன் .........
ஒரு சொல்லில் மரணம்
மறுசொல்லில் ஜனனம்
இதில் எதை கேட்பது உன்னிடம் ?
நீயே சொல் ! என் உயிர் ஓவியமே !!


No comments: