Tuesday, May 8

புலம்பல்ஸ் !



பூவோ, பெண்ணோ நீ அழகாய் பிறந்துவிட்டாய் - அட
எனக்குள் தானே, ஏனோ நீயும் நுழைந்துவிட்டாய்,
நிழலாய் என்னை உன்னுடன் அலையவிட்டாய்,
அனலாய், பனியாய், அனைத்துமே நீயாய் மாறிவிட்டாய்,
உன்னாலே என்னோடு, ஏனோ என்னை பேசவைத்தாய்,
உறங்காத இரவுகளில் உறவின்றி,உளறுகிறேன்
ஒருமையில், தனிமையில், ஒற்றையாய் உன்னோடு.

ஓசை, இசையாய் மாற்றும் மூங்கில் துளையாய்,
மூடி திறக்க பிறக்கிறேன், உன்னினைவுகளால் மெல்லிசையாய்,
போதும் போதும் இவ்விம்சகள் என்றெண்ணும்போது,
வேண்டும் வேண்டாம் என்றாலும் வேண்டும் மீண்டும் என்கிறாய்
வேண்டா விருப்பமாய், வேண்டிய கடவுளாய்,
அழகாய் அழகாய்! பூவாய் பூத்தவள் உன்னிடம்
திரும்ப தருகிறேன், காதல் சாதல் இரண்டையும்.

காதலே நிம்மதி, என்பதை விட
நிம்மதியே காதலாய் ஆனால்,
நிம்மதியாய் காதலித்து விடுவேன்,
காதலியாய் நீயும் கிடைத்துவிட்டால்.

::: கோ.இராம்குமார் :::



No comments: