Thursday, May 10

கறிக்கடை காக்கைகள்! ( குட்டிக்கதை )



------

அதுவொரு ஞாயிறு காலை, இளங்காலை பொழுதும் என்பதால் அங்குமிங்குமாய் ஓரிரு மக்கள் நடந்தவாறு சுறுசுறுப்பை முடுக்கி,
விடுமுறையை செலவிட ஆயத்தமாயினர் ஒவ்வொருவரும். ஞாயிறு என்பதால் இன்றைய விற்பனை மற்ற நாட்களை காட்டிலும் சிறப்பாக இருக்கும்
என்பதால், சில்லறை செலவிட்டு பத்து ஆடுகளை சேர்த்தே வாங்கஈருந்தார் கரீம் பாய், கடையை திறந்து சுத்தமிட்டு, தராசை மாட்டி, எடைக்கற்க்களையும்
சரிப்பார்த்து அடுக்கிவைதார், கடைப்பையன் கழுத்தறுத்த ஆட்டின் தோலை உரித்து தலைக்கீழாய் கொக்கியில் மாட்டிட வரத்தொடங்கினர் வாடிக்கையாளர்
கூட்டம், கூட்டத்தில் ஒருவர்: பாய் நல்ல இளங்கறியா ஒரு முக்காக்கிலோ போடுங்க, இன்னொருத்தர்: அப்படியே எனக்கும் ஒரு அரைக்கிலோ கொடுங்க பாய் என கூட்டம் களைக்கட்ட தொடங்கியது, பாயும் கறியை வெட்டி காசாக்கினார்.

எங்கயாவது ஒரு துண்டு கீழ சிதறாத என்கிற ஏக்க பார்வையில் பெரிதாய் ஒரு காக்கை கூட்டம் ஆங்காங்கே, மின்சார கம்பியிலும், கடை கொட்டகையிலும்,
மரத்தின் தாழ்கிளையிலும் அமர்ந்தவாறு, பார்வை மொத்தமாய் கறிகடையிலே பயனிதவாறு, பரிதாப காக்கைகள்!.
எதிர்ப்பார வேளையில் ஒருவர் வாங்கி சென்ற கறிப்பை அறுந்துவிழ அத்தனை கறியும் கொட்டியது தரையில், பதறிய அவரும், பறந்துவந்த காக்கைக்களுமாய் சண்டையிடா குறையில் எட்டியவரை லாபம் என்று கொத்தியக்கறியுடன் பறந்தன அதிர்ஷ்டத்தில் இருந்த ஒன்றிரண்டு காக்கைகள், எஞ்சி இருந்த காக்கைகளோ அஞ்சிய முகத்துடன் எட்ட இருந்தே ஏக்கத்தில் சோகத்துடன் பார்த்தன. கூட்டத்தில் ஒரு பரிதாபம் என்னவெனில், ஒரு காக்கைக்கு ஒருக்கால் கிடையாததும், இன்னொரு காக்கைக்கு அடிபட்ட இறைக்கையுமாய் பறந்துசென்று எடுக்க முடியாமல், ஊனத்தால் தன்னம்பிக்கை இழந்தார்ப்போல், நம்மால் முடியாது என்பதுப்போல், எடுத்துவரும் காக்கையிடம் எனக்கும் சேர்த்தே எடுத்துவா என்பதுப்போல், அவைகளை பார்த்து கா கா என கரையும் தருணம் சோகமாய் தெரிந்தாலும், ஊனமாய் இருப்பதை பலவீனமாய் எண்ணி இருப்பதை நினைக்கையில், உண்மையிலே எனக்கு வந்த கோபம் அந்த காக்கையின் மீதா இல்லை, அத்தனை படைத்த கடவுளின் மீதா, எனக்குள் ஒரு விவாதம் அரங்கேற, முடிவுதெறியா முற்றும் போட்டேன்.

முதற் முயற்சியுடன்
::: கோ.இராம்குமார் :::



No comments: