Saturday, December 29

குழந்தைத் தொழிலாளர் முறை! (எழுத்தோலை, கவிதைத் திருவிழா)


குழந்தைத் தொழிலாளர் முறை
(எழுத்தோலை, கவிதைத் திருவிழா)
-----------------------------------------------------

குழந்தை தொழிலாளர் -
களாம் நாங்கள்,
கலாம் ஐயா சொன்னதெல்லாம்,
கனவு காணவே - நாங்களும் கண்டோம்,

காண்கிறோம் - ஆனால், ஏனோ
இன்னும் விடியல், எங்கள்
திசையில் விடியவே இல்லை,
எங்கள் கனவும் பலிக்கவே இல்லை,

எங்கள் கரங்களும் எழுதிட ,
கண்களும் பார்த்துப்படித்திட,
இயலாமல் நாங்களும்,
பட்டாசை சுருட்டி,
செங்கலை அறுத்து,
பொட்டலம் மடித்து,
மேஜையை துடைத்தே,

அ னாவும், ஆ வன்னாவும்,
அறியாப் பிள்ளையாய்,
பெருக்கலும், கூட்டலும்,
கழித்திடத் தெரியா விழிக்கிறோம்,

பத்து விரல்களை
படைத்த இறைவன்,
ஒன்றையும் ஒன்றைப்
போல் படைக்கவில்லை,

ஏற்றத் தாழ்வு
நிறைந்த உலகில்,
ஏற்றமே ஏமாற்றமாய் நாளும்
எங்கள் வாழ்வில்.


எழுத்தோலை!

No comments: