Sunday, September 9

அன்னம்!



சித்திர சேலை
மடிப்புக்கள் போல,
கலையாத கூந்தல்
கார்முகில் போல,
காற்றினில் பறக்கும்
பூங்கொடி போல,
வாசனை பரப்பும்
சந்தனம் போல,
வார்த்தைகள் யாவும்
கோர்வையாய் என்னை,
உன் கூந்தல் சிடுக்கில்
கோர்க்குதடி,

மேல்
ஆடையாய் என்னை
அணிந்திடு கண்ணே,
ஜாடையாய் ஒருமொழி
பேசிடு பெண்ணே,
வாடையால் தேகம்
சிலிர்த்திடும் முன்னே,
ஜோடியாய் மாலை
மாற்றிட வா, வா,

மஞ்சள் பூ சூடிய
மார்கழி பனியே,
அன்னமாய் என்
கன்னக்குழி நிறைந்த
பொற்றாமரையே!


எழுத்தோலை கோ.இராம்குமார்

No comments: