Sunday, September 9

மழை!


September 9

நில்லென்று சொன்னாலும்,
கேட்காத மழை - அதனால்
சொல்வதை நிறுத்திவிட்டு,
மரமாய், மலராய், முழுதாய்
நானும், அவளும் நனைந்து,
நடுங்கும் வேளையும், ஏதோ
கதகதப்பு வேண்டும் போல்
தேட,
கைப்பிடியில் தொடங்குமோ
உரசல்களும், உளறல்களும்,
பரவிய நெருப்பில் கரைந்தது
மழையோ, அவளோ - இல்லை
எங்கள் இதழோ,  இளமையோ,
தேகச்சூடு இளகும் வரையில்,
நனைந்தோம் அடை மழையில்,
துடைத்திட தோனா மீண்டும்
நனைந்தோம் விடா மழையாய்,

அவளும் மழையாய்,
நானும் மேகமுமாய்.


எழுத்தோலை கோ.இராம்குமார்

No comments: