Sunday, September 9

இட்லி!



நிலவினை தரவிறக்க
என் அன்னையிடம் தான்
கற்றுக்கொள்ள வேண்டும்,

அரையாழாக்கு பச்சை
அரிசியை தட்டி - கூடவே
கால்யாழாக்கு உளுத்தம்
பருப்புடன் ஒருப்பிடி
வெந்தயமும் சேர்த்தே,
ஊறவைத்து ஆட்டுக்கல்லில்
ஆட்டியே வெண்ணையாய்,
குருணை குருனையாய்,
மசித்து எடுத்து உப்பும்
கலந்து புளிக்கவிட்டு,
காலையில் விறகைத்தினித்து
அடுப்பைமூட்டி, சட்டியில்
கொஞ்சம் நீரும் ஊற்றி,
குளித்தட்டின் ஒவ்வொரு
குழியில், பொதுவாய்,
மெதுவாய் வார்த்து,
ஆவியால் பூக்கவிட்டு,
ஐந்து, பத்து வினாடிகளில்
தட்டில் தரவிறங்கும்
நிலவாய் வெளிச்சம்
பரப்பும் வெள்ளை
இட்லி,
ஜோடியாய் துகையல்,
கூடவேசாம் பார்,
இத்தனயும் இருந்தால்,
எத்தனை என்
உள்ளிறக்குவேன் என்று
எனக்கே தெரியாது,

என் அம்மாவிடம்
கற்றுக்கொண்டேன்
நிலவினை தரவிறக்க,
வெள்ளையாய்
மல்லிகைப்பூ இட்லி
விடிவில்.


எழுத்தோலை கோ.இராம்குமார்

No comments: