Sunday, September 9

செல்ல நண்பன்!


 
முற்றத்து வீட்டு
வாசற்ப்படியில்,
மல்லிகை மொட்டு
வாசம் கொடியில்,
லேசாய் சிரிக்கும்
பல்வரிசை பத்தும்
சில்மிஷம் பேசும்,
துளிவிஷம் உண்டவன்
போலே,
தலைசுற்றி நிற்கும்,
தலைக்கால் புரியாதவன்
போலே
காலிடறி சிக்கும்,
மாய கண்ணும்
மான்விழி தானோ,
மயக்கம் கொடுக்கும்
திராட்சை ரசமாய் - என்
கண்களை மயக்குதே,
பார்த்திபன் வில்லும்
பத்திரமாய் உன் புருவமாய்,
அம்பெய்த ஆயத்தமாய்
இருப்பதை போலவே,
என்னை இலக்காய்
நோக்குகிறதே,

சொல்லி வை அதனிடம்
நான் உன் செல்ல நண்பன் என்று!

------------------------------------------------------
எழுத்தோலை கோ.இராம்குமார்
------------------------------------------------------

No comments: