Monday, November 12

கனவின் உச்சம்!


Oct`24

ஊடல் பொழுதில்
மயக்கம் கொண்டேன் -
காதலனே,
கண் முன் கண்டேன்
உன்னை,


கட்டியணைத்து,
முத்தமிட்டு,
கடித்திலுத்தேன் உன்
இதழை என் இதழில்,
ஆசையால் நீங்கா
ஆசையால்,

ஆர்ப்பரித்து ஆனந்தத்
தாண்டம் ஆடியவளைப்போல்
சிலிர்த்துப் போனேன்,
சிலநேர அசைவில்,
சிலுமிச விளையாட்டில்,
கட்டில் உடைந்ததில்
விழித்தெழுந்தேன்,

கனவின் உச்சம்
என்னை மிச்சம்
விட்டதால்.

 
 
எழுத்தோலை, கோ.இராம்குமார்.

No comments: