Monday, November 12

வீண் பேச்சு!


Nov`10

கிசு கிசுத்த
பேதையின் பேதமையும்,
பேசியிருக்க,
சேர்ந்திருக்க கூடாத
நட்பும்,

விளைவித்த வினையும்,
பகையோ?

மூங்கில்
காடொன்றில் தீயும்,
சிறுதுளி
விழுந்து கனிய - பரவும்,
நெருப்பின் வேகம்,
ஒளியை மிஞ்சுமோ?

வீண் பேச்சு,
பொசுக்கியது மலரொன்றை.


எழுத்தோலை, கோ.இராம்குமார்.

No comments: