Monday, November 12

தித்திக்கும் தீபாவளியாம்!


Nov`11

தீயில் வெந்த பிஞ்சுக்
கரங்கள் சுருட்டிய
லட்சுமி வெடி,
கற்க வசதியின்றி,
கைக் கூலியாய்,

இருபதும், முப்பதும்,
பெற்று
நாற்பதும், ஐம்பதும்,
முடிந்த அன்னைக்கு
அன்னமிட,

அன்றாடம் காட்சியாய்,
தொலைகாட்சி
வாயிலாய்,
சிவகாசியில் தீ விபத்து,
முப்பத்தைந்து
உயிர்கள் தீயில்
கருகியது - என்கிற
செய்தி கேட்டு,
அச்ச்சோ
சொல்லி முடித்து,
அடுத்த நொடியே
பட்டாசு கடை
நோக்கிய பயணம்,

"என் தெருவிலே
எங்க வீடு வெடிதான்
கலக்குச்சி"

பெருமைக்கு
எதோ தின்னும்,
எட்டாவது
வீட்டுக்கரனாய்,
எத்தனை, எத்தனை
பேர்?

தீயாய் பொசுங்குதடி,
கரியாய் போகுதடி,
புகையாய் பரவுதடி,
காசும் - மனசும்,

தித்திக்கும் தீபாவளியாம்,
கசக்கிறது எனக்கு.



எழுத்தோலை, கோ.இராம்குமார்.

No comments: