Monday, November 12

வெறுமை!


Oct`30

மன்றம் நுழைந்த
தென்றலாய் தானே
நானும் இருந்தேன்,
இதுநாள் வரையில்,
ஏனோ - யாரோ

கதவடைத்துப்
போவாறோ,

தானே சரிந்த
மரமாய்,
சட்டென்று நின்ற
ரயிலாய்,
இறகை மூடிய
பறவையாய்
ஒரு வெறுமை,

என்னை ச்சுற்றிலும்,
ஏகாந்தம் சேர்த்துக்கொண்டு,
ஏளனமாய் பார்க்கிறதே!


எழுத்தோலை, கோ.இராம்குமார்.

No comments: