Monday, November 12

இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!


முறுக்கிப் பிழிந்த
முறுக்கு சிக்கல்கள்,
கடிக்கும் தருணம்
கர, முற வென
நொறுங்கும்,


வாழ்வும் அப்படியோ,
சிக்கலாய் முறுக்கிக்
கிடக்கும் இன்னல்கள்
யாவும் - நொறுங்கும்,
தருணத்தை இப்-
பண்டிகை தொடங்கி
வைக்குமோ?

வெடித்து சிதறி,
புகையாய் போகும்
தெருவும்,
குப்பையாய் சேரும்
சரவெடி,

தீமைகள் யாவும்
வெடித்துச் சிதற,
புகையாய் ஒரு
மாயை தோன்றி,
காற்றில் மறையுமோ,
இப்பண்டிகையால்,
இதுவும் நடக்குமோ?


பெரியவர், சிறியவர்,
அன்னை, தந்தையர்,
சிறுவர், சிறுமியர்,
மழலை என
அனைவருக்கும்,

என்,

இனிய தீபாவளி
நல் வாழ்த்துகள்.



எழுத்தோலை, கோ.இராம்குமார்.


"எழுத்தோலை நண்பர்கள் அனைவருக்கும்
எழுத்தோலையின் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

No comments: