Monday, November 12

என்னையும் அறியாமலே!


Nov`01

உருவில் திரு உருவில்,
உமையாள்(உமா), ராஜேஸ்வரி,
என் உடன்ப் பிறக்கா
சகோதரிகள் நீங்கள்,
தான் ஆடாவிட்டாலும்

தன் தசையாடும் என்பதை
உண்மையில் உணர்ந்தேன்,
உங்கள் துடிப்பில் நானும்,

என்னையும் கேட்காமலே,
என் நிலை யறிந்து,
எங்கிருந்தோ வந்தே,
என் இன்னலை போக்க,
கடலலையாய் என்
கண்களில் கண்ணீர்
உருளுமோ என்னையும்
அறியாமலே,

நெருஞ்சி முள் குத்திய
இதயத்தில் மயிலிறகில்
மருந்திட்டு, வலிகளும்
பறந்திடவே செய்தாயே,
அன்புள்ள சகோதரியே,
நீயும் - எனக்கு,
இன்னொரு அன்னையோ ?
உயிர் பிரியும் வலியை,
உன்னுயிர் மட்டுமே
அறியுமோ - அழைக்காமலே,
தவமிருக்காமலே,
கண்முன் தெரிவாயோ?

இருக் கைகள் கொண்டே
வணங்குகிறேன் - தெய்வமாய்
உன்னை, - என்றும்
அழியா உறவைப்
பெற்றேன் தம்பியாய்,
நானும் என்றென்றும்
இருந்திடுவேனே - உன்
சொல்க தவறா
நடந்திடுவேனே.


அன்பு தம்பி,
எழுத்தோலை, கோ. இராம்குமார்.

No comments: