Monday, November 12

வாழ்வா - சாவா!



Oct`30

மரண தண்டனைக்
கைதியாய்,
தூக்குக் கயிற்றை
எதிர்நோக்கி -
எண்ணிக்

கொண்டிருக்கிறேன்
மணித்துளிகளை -
சில நாட்களாய்,

மரணம்!
நானே என்னை
மாய்க்கும்முன்,
தானே வருமோ - என்
தலையைக்
கொய்யுமோ?

வாழ்வா - சாவா
போராட்டத்தில் - வாள்
முறிந்த வீரனாய்,
யானும் - ஏனோ
வாள்க்கொடுக்க,
யாருமின்றி,
தலைக்கொடுத்து
வீழ்வேனோ ??

 
 
எழுத்தோலை, கோ.இராம்குமார்.

No comments: