Monday, November 12

காக்கை குளியலாய், தண்ணீர் சிக்கனம்!


Nov`11

நீர்த் தேக்க
தொட்டியில்
நிரம்பி வழிந்த நீர்,
தரை தொட்டு,
குட்டையாய்

தோன்றி,
காக்கைகள்
குளிக்க - நீச்சல்
குளமாய் மாறுமோ?

ஆறு, குளம்
இல்லா நகரில்,
இரண்டு மணிநேர
மின்வெட்டு
முடிந்தும், மறு -
நாள் வரும் வரை,

நீரின்றி அமையா
இவ்வுலகில்,
நீரித்தேடி திரிவதும்
இதனால் தானோ?

காக்கை குளியலாய்,
தண்ணீர் சிக்கனம்.


(தண்ணீரை சேமியுங்கள்!)

எழுத்தோலை, கோ.இராம்குமார்.

No comments: