Sunday, October 7

சித்திரமோ அவளும் என் கண்களுக்கு!


மென்மை சிரிப்பு,
கூறியப் பார்வை,
மெல்லிய இதழில்
சொல்லிடும் அழகும்,
பார்த்திட, பார்த்திட

தோன்றுமே காதலும்,
காணாமல் போன
கைப்பிள்ளைப் போலே,
காணாமலே தொலைந்தேனே,
சித்திரமோ அவளும்
என் கண்களுக்கு,
எழுந்து, நடந்து
வந்தே, நித்திரையில்
இருந்த என்னை,
எழுப்பியதிலிருந்து
தூங்கவே இல்லை,

கை சேரும் கை
வளைப்போல்,
மை சேரும் மை
விழிப்போல்,
அவளை சேரும்
நாளை எண்ணி
ஏக்கம் கொண்டே
எனை மறந்தேனே.



(சித்திரம் எழுந்து, நடந்து
வந்து என்னிடம் பேசியதை,
என்னாலே நம்ப முடியவில்லை,
நீங்கள் எப்படி நம்ப போகிறீர்கள்.)



எழுத்தோலை கோ.இராம்குமார்.

No comments: