Wednesday, December 21

நினைவு !

இனிமை கொஞ்சும் இரவு நேரம்
இலைகள் அசைவில் வசந்த காலம்
இறகை போல மெல்லிய காற்றில்
அவள் நினைவுகள் எந்தன் நெஞ்சின் ஓரம்
கணவாய் போனகும் காதலே பொய்யோ ?
காணாமல் போன எந்தன் இதயம்
துடிப்பது போன்ற துடிப்பே நீயோ ?

துகில் உறிக்கும் பாம்பாய் நெளிந்தேன்
இலை உதிர்ந்த மரமாய் நின்றேன்
மலர்ந்து மடிந்த மலராய் ஆனேன்
தோகை இழந்த மயிலோ நானும் ?

மயக்கம் தெளிந்து விழித்தது போன்ற
மனநிலை எந்தன் மனதை இருக்க
இயங்க மறுக்கிறது எந்த இதயம்
எங்கே உன் குரல், காற்றை கேட்டேன்.

கடந்து போன நாட்களின் நினைவில்
கடலலையாய் நானும் கரை சேர முடியாமல் !!

No comments: