Wednesday, December 21

முட்கள்!

இனிமையை சொல்லும் உதடுகள் கூட
சில நேரம் பொய்கள் சொல்லும்
உன் இமைகளோரம் கவிதை பாடும் கண்கள்
என்னுள் கலந்து போகும்,
நீ நிலவோ,
அதன் உறவோ.
மலரோ,
அதன் மனமோ.
இசையோ,
அதன் இனிமையோ.
மழையோ,
அதன் துளியோ.
பனியோ,
அதன் தூய்மையோ.
இதில் எதுவோ,
நீயாய் தெரிந்தது.
நீ கடந்து வந்த நாட்கள் எல்லாம் முட்கள் படர தவித்து நின்றாய்
தந்தையும் தாயும் உன்னுள் உன் உருவாய் இருக்க,
உன் எண்ணங்கள், சிந்தனையாய் உன் உதட்டில் படித்தாய்
பிறை தேய்ந்த காலங்கள் இருள
இருள் சூழ்ந்த பயணத்தில் உன் கால் தடங்கள் தெரியுமோ ?
இந்த இருள் சூழ்ந்த காலங்கள் மறையும்,
காலம் வெகு தொலைவில் இல்லை,
காத்திரு நீயும் கனியும் கனி ருசிக்க...






No comments: