Wednesday, December 21

கை சேர!

நேற்றிரவு நித்திரையோ நிலவுக்கே சொந்தம்,
நிஜம் சொல்ல நினைத்தால், அவள் நிலவின் பந்தம்,
பௌர்ணமியின் வெளிச்சமும் , பகலவன் வருகையும்
இணைகின்ற நேரம், விடிகின்ற பொழுதோ ?

உறங்காத இறவை நிறைத்ததும் அவளே !
திடமான நெஞ்சை குடைந்ததவள் விழியே !
சிரித்தாலே மழலையாய், சிதைத்தவள் இதழே !
மறந்தேனே நிலவாய், மறைத்தவள் அழகே !
கண் பேச கேட்டதில்லை, பேசியதவள் இமையே !

இதுவரை இல்லையடி ஒருநாளும் இதுபோன்று
என்னதவம் செய்வேனோ !!

அவள் கரம் எந்தன் என் கை சேர ??

No comments: