Tuesday, December 27

தணல் !

நீ வராத நாட்களில்
உன் வாசல் பார்த்து, காத்து நின்றேன்
என் வீட்டு ஜன்னல் கதவுகளை கூட
சாத்தாமலே !

வாசம் பூண்ட மலரே நீயும்
இன்றென்னை சிறை
வாசம் புக செய்ததும் ஏனோ ?

புகையாத நெருப்பாய் நானும்
தணல் விட்டு எரிகிறேன்
வந்தென்னை அணைப்பாயோ ?
என் வாழ்வில் வசந்தம் வீச
செய்வாயோ ??

No comments: