Saturday, December 24

கனவு ...


கனவு ...

சத்தங்கள் எல்லாம்
சங்கீதமாய் - உன்
முத்தங்கள் எல்லாம்
சந்தோசமாய் - நான்
நிதங்கள் எல்லாம்
உன் பெயரை - தினம்
பக்கங்கள் எல்லாம்
நிரப்புகிறேன், உன் புன்சிரிப்பில்
உயிர் வாழுகிறேன்.

புது மலராய் - நீ
பூத்திருக்க, உன்
புன்னகையால்
மதிமயங்கி - அந்த
அதிர்ச்சியில் சற்றே
சாய்ந்திருந்தேன் - உந்தன்
சங்கீத குரல் கேட்டு எழுந்துவிட்டேன்

மெதுமெதுவாய் உன்னை
சேர்த்தணைக்க - சிறு
வண்டினை போல்
தேன் ருசிக்க
கண்டிப்பாய் வந்திருப்பேன்
என் கனவு மட்டும்
கலையாதிருப்பின் ...................

No comments: