Wednesday, December 21

நிஜம் தேடும் நிழல் !


நிஜம் ஒன்று சொல் பெண்ணே
உந்தன் நிழல் என்றும் நானே என்று....
----
நிஜம் ஒன்று சொல் பெண்ணே
உந்தன் நிழல் என்றும் நானே என்று,
உன் மடி சாய்ந்து தோளிலும் சாய்ந்து
உறங்க நினைத்தது தவறில்லை என்று.

மலர் சேரா மாலையும் உண்டோ
அந்த மாலையும் சேரா திருமணம் உண்டோ ?

நதி சேரா கடலும் உண்டோ
அந்த கடல் சேரா அலையும் உண்டோ?

பொன் சேரா பெண்ணும் உண்டோ
அந்த பெண் சேரா புன்னகையும் உண்டோ ?

நிஜம் ஒன்று சொல் பெண்ணே
உந்தன் நிழல் என்றும் நானே என்று....

பூவுக்குள் புதைந்தவளே இந்த
பூவுலகில் ஏன் வந்தாய் ?

வழிமாறி சென்றவன் நானே
உந்தன் விழி பார்த்து புதுப்பாதை கண்டேன்,

நிஜம் தேடும் நிழலும் நானே ?
நீ இன்றி நானும் அன்றோ ??

நிஜம் ஒன்று சொல் பெண்ணே
உந்தன் நிழல் என்றும் நானே என்று....



No comments: