Wednesday, December 28

முக நூல் !


எங்கிருந்தேன் என்று
எனக்கே தெரியாத நிலையில்
இன்று என்னை தெரிந்தவர்கள்
மூவாயிரம், ஆயிரம் பேர்.
பேச்சுரிமை,
சிந்தனை,
எண்ணங்கள்,
நிகழ்வுகள்,
நிகழ்பவை,
நிகழ்ச்சி ,
நினைவு,
கருத்து,
வாக்குவாதம்,
பதிவுகள்,
படங்கள், இத்தனையும்..,
எதனை பேரை சேர்ந்திருக்கும் ?
நீ இல்லாமல் போய்விடின்.

என்னவளை சந்திக்க வைத்தாய்,
என் நண்பனுடன் பேச வைத்தாய்,
தொலைந்து போன சொந்தத்தை மீட்டு தந்தாய்,
புது, புது தோழர், தோழியை கொடுத்தாய்,
என்னையும், என் ஆற்றலையும் வெளிகொனர்ந்தாய்,
பேச்சாற்றல் பிறந்தது,
கவி வரிகள் எழுதினேன்,
பல, பல நல்லுள்ளங்களை சந்தித்தேன்,
புது உற்சாகம் கிடைத்தது
முகநூலே நீ எங்கிருந்தாய் இத்தனை நாள் ?
இந்த ஒரு தருணத்துக்கா, என்னை
முப்பத்திரண்டு வருடம் காக்க வைத்தாய்
சுருக்கமாய் சொல்வதெனில்
சோறின்றி கிடந்தாலும் கிடப்பேன் நானும்
நீ இன்றி ஒருநாளும் உயிர் பெறாது

வாழ்க உன் புகழ் ! வளர்க நீ வானுயர !!

No comments: