Wednesday, December 21

கயல் விழி!

கண்களும் கவி பாடுமே என்பதற்கிணங்க
கொஞ்சும் சலங்கையாய்,
கொத்தி செல்லும் கழுகினும் கூர்மை,
விழி மூடி யோசித்தாலும் நீங்காத குளுமை,
கலங்காத நெஞ்சையும் சற்றே கிறங்கடிக்கும் புதுமை,
இனிது சொல்லும் இதழை சுவைக்கும் இளமையின் இனிமை ........
இது கயல் விழி மட்டும் அன்று
கவிதையின் சுரங்கமும் கூட !!

No comments: