Wednesday, December 21

இளைய மகள்!

நில்லாமல் சுழலும் பூமி நின்றாலும் நின்றுபோகும்,
நிலையில்லா இடபெயர்ச்சில் நகரும் நிழலும் மறைந்து போகும்,
நீலமேக கடலலைகள், கண்ணயரும் கரையோரம்,
அவளுகென்று காத்திருந்தேன், நில்லாமல் சுழலும் பூமியாய்,
காலங்கள் நகர்ந்ததில் நிழல் போல் சுருங்கினேன்
கடலலையாய் கரை தொட முடியாமல், கண்ணயர முடியாமல்.
மங்கியது சித்திரை வெயிலும், சந்திரனின் வருகையால்,
வந்தாள் அவளும்,
மிளகாய் பஜ்ஜி வாங்க சென்ற
என் இளைய மகள், காசை தொலைத்த பயத்தில்
அடிக்கு பயந்து, பயந்தவாறு !!

No comments: