Thursday, March 1

தங்க தளபதி !


தங்க தளபதியே !
எங்கள் தலைவனே !!
தரணியை ஆளாப்பிறந்தவனே!!!

உனக்கு இன்று பிறந்தநாள் - இதுவே
தமிழுக்கும், தமிழனுக்கும் சிறந்தந்நாள்,
தவம்க்கிடந்து பிறந்த முத்தோ நீயும் - நிகர்
இல்லை உனக்கு, இங்கு எவரும்.

பேரறிஞர் அண்ணா வழிநடக்கும்
தமிழ்வ்வேந்தர் கலைஞர் பெற்றெடுத்த
தவபுதல்வரே ! எங்கள் தளபதியே !!
உன்னால் இந்நாள் பொன்னானது.

உன் கண்ணசைவில், இதழசைவில்
எங்கள் செயல் அனைத்தும் ஒருநொடியில்
செய்துவிட காத்திருக்கும் எமக்கு
ஆணையிடு செந்தமிழ் செல்வா.

ஆலம்ப்போல் விழுதூன்றி
அமில்தமிழ் மொழிப்பேசி
ஆரியனவள் கொட்டம் அடக்க
ஆணவத்தின் தலைவியை அழிக்க
அதிகாரம் உன் கையில் வருமோ - அந்நாளில்
தமிழகமும் புது உயிர் பெறுமோ !

உன் வரவால் மகிழ்ந்தது எங்கள் நெஞ்சம்,
உன் சிரிப்பால் சிலிர்த்தது எங்கள் உடலும்,
உன் பேச்சால் முறுக்கேறி முறைத்து எங்கள் நரம்புகள்,
உன் துணிவால், பயம் மறந்தது எங்கள் கண்கள்,
உன் அயரா உழைப்பு, நீ எமக்கு கற்றுத்தந்த பாடம்.

வாழ்க நீ பல்லாண்டு என்று வாழ்த்த வயதில்லை எனக்கு - எனவே,
என் நெஞ்சம் நிறைத்து வணங்குகிறேன்
இறைவனாம் எங்கள் கலைஞரை,
உன்னை எங்களுக்காய் ஈன்றெடுத்து தந்தமைக்கு!



:::: இராம்குமார் கோபால் ::::




No comments: