Saturday, March 10

மழலை ச்சிரிப்பு!


பச்சிளம் பருவம் அறிந்ததெல்லாம்,
பசி, தூக்கம் இவ்விரண்டும் தானே !
இறைவனது ப்படைப்பில், ஆறறிவை
தாங்கி, தவழ்ந்து, விழுந்து, எழுந்து
நடக்க நாள் ப்பொழுது கடக்க!

மல்லிகை மொட்டாய், எட்டிப்
பார்க்கும், பற்கள் தெரிய சிரிக்கும்,
அந்த சிரிப்பினில் தான் எத்தனை அர்த்தம் !
கள்ள சிரிப்பு என்பதா ?
செல்ல சிரிப்பு என்பதா ?
கவலைத்தெரியா சிரிப்பு என்பதா ?
அன்பின் இதழ்விரிப்பு என்பதா ?

சிரித்து மகிழ்ந்து,
விளையாடி சோர்ந்து,
தூங்கும் வேளையிலும் என்ன -
அது சிரிப்பு ? கோடி கோடியாய்,
கொட்டிக்கொடுத்தாலும் , தேடி
எங்கும் அலைந்தாலும், அச்-
சிரிப்புக்கு ஏது ஈடாகுமோ ?

:::: இராம்குமார் கோபால் ::::



No comments: