Tuesday, March 13

மயக்கம் !


மயக்கம் !

மலர் போன்ற விழி - உன்
பெயரும் அதுவோ !

நான் சொல்லாமல் அழைத்தேன்
எனக்குள், உன் பெயரை
வாசம் பூ வாசம், என் வசம் !
வண்ணத்து பூச்சிகள், தேனீக்கள்,
தேடி பறந்து வந்த வண்டுகள் கூட்டம்,
எனை மொய்க்க வருவதை கண்டு !
என் தலை சுற்றிப்போனேன்.

மயக்கம் எதனால், என்பது புரியாமல் !!


:::: இராம்குமார் கோபால் ::::



No comments: