Sunday, March 18

சுகம் !




பிரியமானவளே !

உன்னை பார்த்தப்பொழுது,
என்னை நான் மறந்தேன்.
பனிக்குள் புதைந்த மலரைப்போல்,
உனக்குள் நானும் உறைந்தேன்.
உனக்குள் இருக்க எனக்கென்றும் -
பிரியமே! பிரியாமல் எனை, என்றும்
உன்னுள் வைத்திருப்பாயோ ?

காதலெனும் கவிப்பாட,
கவிஞ்சனாய் நானுண்டு.
காவியமே உனைப்பாட, எப்
புலவன் இங்குண்டு ?
கற்கண்டாய் நீ இருக்க,
கொம்ப்புத்தேன் எதற்கு ?
செந்தமிழின் பழமைப்போல்,
மாறாத உன்னழகே, தனிச்சிறப்பு.

மதியதன் ஒளியின்றி,
அல்லிம்மலர் மலர்ந்திடுமோ ?
என்னவளே ! நீயுமின்றி - என்
இதயமும், இயங்கிடுமோ ?
உனைக்காணமல் என் கண்ணிருப்பது,
கடலில்லா உலகம்த்தானோ ?
நீ! என்னை காணாமல் செல்வது,
இதயம்ப்பிரிந்த உடலாம், நானோ ?

என்னிதயத்தை, உன்னுயிரோடு இணைத்துவிடு!
உன்க்காதலை, எனக்கே கொடுத்துவிடு!
உயிரோடு உயிராக கலந்து,
காலமெல்லாம் காதலித்து,
திருமண, நறுமணம் நுகர்ந்து,
நூற்றாண்டுக்காலம் வாழ்ந்திடுவோம்,
நிறைவில்லா ச்சுகம் அடைந்திடுவோம் !!

:::: இராம்குமார் கோபால் :::::



Online Casino Australia Online Casino Casino Online Grand reef casino Casino Mate

No comments: