
பெண்ணிலவை தூங்கவைக்க,
தாலாட்டு பாடல் பாட எண்ணி,
உவமைகள், தேடி பறக்கிறேன்,
சிந்தனை வானில்,
வற்றாத கடலில்,
பைந்தமிழ் மொழியில்.
அரிதான முத்துப்போல்.
அறியாத குழந்தைப்போல்,
அழகான உன்னைப்போல்.
எங்குமே இல்லை, அன்பே!
என்ச்செயவ்வேன் நானும், இனியும். ?
:::: இராம்குமார் கோபால் ::::
No comments:
Post a Comment