
மீளாத்துயரம் தூரத்தெரிகையில்,
மீனின் கண்ணுடையாள் - ஒளி
பட்டென்நெஞ்சம் விம்மி துடித்திட,
விடியல் தொடங்கியதுப்போல் ஓர் புதுமை....
கிளிகள் பேச்சாய், அவள் மொழி சிணுங்கலாய்
செந்நிற வானமாய், அவள் இதழ்ச்சாயம் மின்னலாய்
சூரியன் உதயமாய், அவள் கண்கள் வெளிச்சமாய்
விடிந்தது காலையும், விழுந்தது அவள் மடியிலோ ?
பறந்தது துயரமும், என்மேல் பரவிய அவள் வடிவிலோ ??
:::: இராம்குமார் கோபால் :::::
No comments:
Post a Comment