Thursday, March 15

கானல் ! (OASIS)


கானல் ! (OASIS)
---

வறுமை இருளில்,
வானம் வசம் மறைந்து,
மேக இடுக்கில் நுழைந்து,
நிலவின் ஒளி படர !

மொட்டான அல்லியும்
மெதுவாய் மலர, உன் முகம்
கானல் நீராய்! தென்பட்டது,
தொலைவில் இருந்ததாலோ என்னவோ?

அருகில் வர, ஆசை நெஞ்சினை -
சுமந்து, வேக வேகமாய் நடந்தேன்,
மேக மூட்டம்ப்போல் கூட்டமாய் -
சேர்ந்து, கலந்த மழையாய்,
மனதோடு என்னுள் கரைந்தாயே !

மழை! பெய்யும் முன்னே மணக்கும்
மண் வாசம் கலந்த, இளங்காற்று வீச -
ரசிக்கும், இளம்பபெண் அவளும் -
சிந்தும், புன்னகை! பூவும் மழையோ ?

:::: இராம்குமார் கோபால் :::::



No comments: