Sunday, March 18

எழுந்தருள்வாய்! அன்னப்பறவையே !!



கொஞ்சும் கிளிகளும்,
பாடிடும் வானம்பாடியும்,
பறந்திடும் பறவைகளுமாய் சேர்ந்து,
கூவிடும் குயிலிடம் சொன்னது -
மயிலாய் நடப்பவள்,
மலராய் மணப்பவள்,
நிலவாய் சிரிப்பவள்,
நித்திரையில் இருக்கின்றாள்.
இரவும் மறையவே,
பகலவன் வந்துவிட்டான்,
உன் கூவலில் அவளை,
கூவியே எழுப்பிடென்று !

இதைக்கேட்ட நானும், குயிலாய் !
என் கவிதையில் கூவுகிறேன்,
மடந்தை பெண்ணே!
மாந்தளிர் கண்ணே!!
மருதாணி சிவப்பாய் - நீ
சிரிப்பதை கேட்க்க,
காத்திருக்கும் -
கிளி,
குருவி,
வானம்பாடி, பறவைகளெல்லாம்,
நேற்றிரவை கடந்து,
கனவில் மிதந்து,
கால் கடுக்க நிர்ப்பதைப்பார் -
உன்னை, ச்சரனடையவே.

எழுந்தருள்வாய்! அன்னப்பறவையே !!

:::: இராம்குமார் கோபால் :::::







Online Casino Australia Online Casino Casino Online Grand reef casino Casino Mate

No comments: